வயதோ 49.. ஆனாலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நக்மா - அவரோடு கிசுகிசுக்கப்பட்ட டாப் பிரபலங்கள் லிஸ்ட் இதோ!
Actress Nagma : இந்திய திரையுலகில் கடந்த 1990ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான நக்மா சுமார் 18 ஆண்டுகள் இந்திய மொழிகள் பலவற்றுள்ள நாயகியாக நடித்துள்ளார். சீன மொழி படம் ஒன்றிலும் நக்மா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Actress Nagma
பிரபல நடிகை நக்மா கடந்த 1990 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் கலை உலகில் அறிமுகமானார். சுமார் 18 ஆண்டுகள் அவர் இந்திய மொழிகள் பலவற்றுள் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.
Kollywood Actress Nagma
இருந்தாலும் அதற்கு முன்பாகவே 23 படங்களில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது, அதில் ஒரு திரைப்படம் சீன மொழி திரைப்படமாகும். தமிழ் மொழியில் இவர் நடித்த இரண்டாவது படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய பாட்ஷா திரைப்படம் தான். இறுதியாக தமிழில் சிட்டிசன் படத்தில் நடித்திருந்த நக்மா, கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
முழுக்க முழுக்க அரசியல் களத்தில் ஈடுபட்டு வரும் நக்மா தனது 49 வது வயதிலும் கூட சிங்கிள் நாயகியாக விளங்கி வருகிறார். இந்நிலையில் அவர் உச்ச நட்சத்திரமாக இருந்த பொழுது சில பிரபலங்கள் அவருடன் இணைந்து கிசுகிசுவில் சிக்கினார்.
Sarathkumar
நடிகர் சரத்குமார், ரகசிய போலீஸ், ஜானகிராமன் மற்றும் அரவிந்தன் என்று பல திரைப்படங்களில் நடிகர் சரத்குமார் அவர்களுடன் நக்மா இணைந்து நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்காமலே இருவரும் லீவ் இன் உறவில் இருக்கின்றார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் வெளியானது.
Prabhu Deva
நடிகர் பிரபுதேவா, நக்மா தமிழில் காதலன் திரைப்படம் மூலம் தான் அறிமுகமானார். அன்று துவங்கி அவர்கள் மத்தியில் காதல் மலர்ந்ததாக சில தகவல்கள் வெளியானது. அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
Sourav Ganguly
கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகை நக்மா மற்றும் கங்குலி ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக அந்த காலத்தில் செய்திகள் வெளிவந்தது கூட பலர் அறிந்த உண்மை தான். ஆனால் அதுவும் இறுதியில் கிசுகிசுவாகவே முடிந்துபோனது.
Dhanush D51 Shooting: தனுஷின் படப்பிடிப்பால்... கடுமையான போக்குவரத்து பாதிப்பு..! பொதுமக்கள் அவதி..!