தமிழ் பிரபலங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கும் வரலட்சுமி!
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் நெருங்கி கொண்டே இருக்கும் நிலையில், தற்போது தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்களுக்கு பத்திரிக்கை வைப்பதில் பிசியாகி உள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்னும் ஓராண்டில் 40 வயதை தொட உள்ள நிலையில், ஒருவழியாக சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்த நற்செய்தியை அறிவித்தார். அதாவது விஷாலுடனான பிரேக்கப்புக்கு பின்னர் திருமணமே வேண்டாம் என இவர் முடிவு செய்து, தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படி இருந்தவர் மனதில் மீண்டும் காதல் மலரை பூக்க வைத்தது, இவருடைய 14 வருட நண்பர்... நிக்கோலாய் சச்தேவ். வரலட்சுமி மீது தனக்கு இருக்கும் விருப்பத்தை வரலட்சுமியின் பெற்றோரிடமே கூறி அனுமதி பெற்று, பின்னர் வரலட்சுமியிடம் புரபோஸ் செய்ய, வருவும் அவரின் காதலை ஏற்று கொண்டார்.
சுடரால் தடைபடும் மனோகரின் பூஜை! மீண்டும் உள்ளே வந்த இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!
இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்தோடு, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர், வரு - நிக்கோலாய் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக... மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
இதை தொடர்ந்து வரு - நிக்கோலாய் திருமணத்தை தாய்லாந்தில் ஜூலை 2-ஆம் தேதி நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஹல்தி நிகழ்ச்சி, திருமணத்திற்கு முதல் நாள் சென்னை தாஜ் ஹோட்டலில் நடக்க உள்ளதாகவும், திருமணத்திற்க்கு பின்னர் கிராண்ட் ரிசப்ஷன் லீலா பேலஸில் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், குடும்பத்தினர் திருமண பத்திரிக்கை வைப்பதில் பிசியாகி உள்ளனர். அந்த வகையில் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்களான ரஜினி, கமல், உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் ஆகியோர்க்கு ஏற்கனவே அழைப்பு விடுத்த வரு தற்போது தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்களுக்கு பத்திரிக்கை வைத்து வருகிறார். நடிகர் சுதீப், ரவி தேஜா, இயக்குனர் வம்சி ஆகியோருக்கு அழைப்பு விடுத்த போது எடுக்கப்பட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.