Tulsi Astrology remedy: தீராத கடன் தீர, பணம் சேர, சக்தி வாய்ந்த பரிகாரம்: உடனே செய்யவும்!!
நீங்கள் விரைவில் பணக்காரராக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் துளசியை கொண்டு உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
சில நேரங்களில் நீங்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், வாங்கிய கடன் அடைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா..? அத்தகைய சூழ்நிலையில், அதிர்ஷ்டத்தை பெற சில விஷயங்களை மட்டும் செய்ய வேண்டும்.
செல்வத்தின் கடவுளாக கடவுளான லட்சுமி தேவியை வழிபடுவது மட்டுமின்றி பல விஷயங்களை செய்ய வேண்டும். அதாவது, துளசி வேர் பரிகாரம் ஒரு நபரை விரைவில் பணக்காரரராக்கும் தெரியுமா?
துளசி லக்ஷ்மி வடிவமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, விஷ்ணுவுக்கும் துளசி மிகவும் பிடிக்கும். எனவே, இவர்கள் இருவரின் ஆசீர்வாதத்தை பெற துளசியில் சில பரிகாரர்கள் உள்ளன. உங்களுக்கு தெரியுமா.. துளசியிலை மட்டுமின்றி, துளசி வேர், தண்டு போன்றவை கூட புனிதமாக கருதப்படுகிறது.
முக்கியமாக, வீட்டில் லட்சுமிதேவி எப்போதும் வாசம் செய்ய, துளசியை வழிபடுவது மிகவும் முக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்லுகிறது. அதுமட்டுமின்றி, ஒருவரை பணக்காரராக்கும் சக்தி துளசி வேருக்கும் உண்டு தெரியுமா? இதற்கு துளசி வேர் பரிகாரம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்.. நீங்களே செய்யலாம்..
இந்த துளசி வேர் பரிகாரம் மிகவும் அற்புதமான பரிகாரம் என்று சொல்லலாம். ஏனெனில், இது ஒரு நபரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் பரிகாரம் ஆகும்.
இதையும் படிங்க: மறந்தும் கூட 'இந்த' பொருட்களை பிறருக்கு கடனாக கொடுக்காதீங்க! வீட்டில் தரித்திரம் வருமாம் தெரியுமா..?
இந்த பரிகாரம் செய்ய உலர்ந்த துளசி வேர்களை எடுத்து ஒரு சுத்தமான சிவப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு அதை வீட்டின் பிரதான வாசலில் தொங்க விடவும்.. இப்படி செய்த லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் வீட்டில் எப்போதும் தங்குவது மட்டுமின்றி, செல்வத்தை பெருக்குவாள். மேலும், இந்த பரிகாரம் எதிர்மறை ஆற்றல் வீட்டில் நுழைவதை தடுக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D