Vanitha: 32 வயதில்... 3 குழந்தை பெற்ற பின்.. மஞ்சுளாவை பெருமை பட வைத்த வனிதாவின் இதுவரை பார்த்திடாத போட்டோஸ்!
வனிதா விஜயகுமார், 3 குழந்தையை பெற்றெடுத்த பின்னர் தன்னுடைய உடல் எடையை குறைத்த பின்னர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில்... பழம்பெரும் நட்சத்திர ஜோடியான மறைந்த நடிகை மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். தங்க தட்டில் பிறந்து வளர்ந்த வனிதா.. தன்னுடைய 15 வயதிலேயே தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே படு தோல்வியை தழுவிய நிலையில், இதை தொடர்ந்து ராஜ்கிரணுக்கு ஜோடியாக 'மாணிக்கம்' என்கிற படத்திலும், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழியலில் தலா ஒரு படம் மட்டுமே நடித்த இவர், தன்னுடைய 18 வயதிலேயே காதலர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்ட வனிதா... குழந்தை, குட்டி என செட்டில் ஆனார். ஆகாஷுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கிய வனிதாவுக்கு ஏனோ அது நுழைக்காமல் போனது, திருமணம் ஆன சில வருடங்களிலேயே.. அதாவது ஜோவிகா பிறந்ததுமே, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதை தொடர்ந்து ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதாவுக்கு... மற்றொரு மகளும் பிறந்தார். பின்னர் இரண்டாவது கணவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்தில் முடிந்தது.
இரண்டாவது கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் தன்னுடைய அம்மா - அப்பாவுடன் தான் வசித்து வந்தார் வனிதா. 32 வயதிலேயே 2 திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து 3 குழந்தைக்கு தாய் என வாழ்க்கையில் பெரும் பகுதியை பார்த்துவிட்டார் வனிதா.
வாழ்க்கையில் பல ஏற்றம்... இறக்கங்களை சந்தித்தாலும், தன்னுடைய குழந்தைகள் மற்றும் ஃபிட்னஸ் போன்றவற்றில் மிகவும் அக்கறை கொண்டவர் வனிதா என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய 32 வயதில் 3 குழந்தையை பெற்ற பின் உடல் எடையை குறைத்து... வனிதா விஜயகுமார் எடுத்த போட்டோ ஷூட்டை பார்த்து, தன்னுடைய அம்மா மிகவும் பெருமை பட்டதாக கூறி இதுவரை யாரும் பார்த்திடாத சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. வனிதா விஜயகுமார் மிகவும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்... குடும்பத்தில் பிரச்சனை வந்த பின்னர், பல கஷ்டங்களுக்கு ஆளானார். அந்த நேரத்தில் கூட தன்னுடைய குழந்தைகளை மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்.
இவரின் வாழ்க்கையில்... மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது, பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் மட்டும் இன்றி, சீரியல், திரைப்படம், பிஸ்னஸ் என பல்வேறு விஷயங்களில் படு பிசியாக வலம் வருகிறார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.