Karthigai Deepam: கார்த்திக்கு எதுக்கு இந்த வேலை? அவமானப்பட்ட அபிராமி.. திட்டு வாங்கும் தீபா! சீரியல் அப்டேட்!
சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல் இதோ..
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா, ரூபஸ்ரீ, மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து போஸ்டரை கிழிக்க ப்ளான் போட்டு இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா, ரூபஸ்ரீ, மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து போஸ்டரை கிழிக்க ப்ளான் போட்டு இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Karthigai deepam serial
உடனே இளையராஜா கார்த்திக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போடுகிறான். அபிராமிக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இதை வீடியோ எடுத்து அபிராமிக்கு அனுப்பி என்ன உன் பையன் இப்படி சண்டை போடுறான் என்று கேட்கிறாள்.
இதனால் அபிராமி இதை அவமானமாக நினைத்து அருணாசலத்திடம் கார்த்திக்கு எதுக்கு இந்த வேலை? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான் என சொல்லி வருத்தப்பட்டு தீபாவை திட்ட கண் கலங்குகிறாள்.
Karthigai deepam serial
பிறகு கார்த்திக் மீண்டும் அனைத்து இடங்களிலும் போஸ்டரை ஒட்ட சொல்ல போஸ்டர் ஒட்டியவர்கள் வேறு இடத்தில் வேலை இருப்பதால் வர முடியாது என சொல்லி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.