3 முறை மஞ்சள் காமாலை வந்தும்... குடியை நிறுத்தல; சாகும் முன் வனிதாவுடன் பாசப்போராட்டம் நடத்திய மஞ்சுளா!
Manjula Vijayakumar : விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தது குறித்து அவரது மகள் வனிதா பேட்டி ஒன்றில் கூறியதோடு, அவருடனான பாசப்போராட்டம் பற்றியும் பேசி உள்ளார்.
vanitha, manjula
சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வருபவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்த இவர், தன் தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குடும்பத்தைவிட்டு பிரிந்தார். வனிதாவின் மகன் ஸ்ரீஹரியை விஜயகுமார் விமான நிலையத்திற்கு வந்து அவருடன் சண்டையிட்டு அழைத்து சென்ற நிகழ்வை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இதன்பின்னர் வனிதா தன் தந்தையை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
manjula vijayakumar
ஒரு கட்டத்தில் வனிதா மீது பாசமாக இருந்த அவரது தாய் மஞ்சுளாவும், மகளைப் பற்றி அவதூறாக பேச தொடங்கினார். அவள் தனது மகளே கிடையாது, ராட்சசி. அவள் என் வயிற்றில் பிறந்ததை நினைக்கும்போதே கேவலமாக உள்ளது என்றெல்லாம் திட்டித்தீர்த்தார் மஞ்சுளா. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு மஞ்சுளா காலமானார். அவரின் மறைவின் போது கூட வனிதாவை இறுதிச்சடங்கு செய்யவிடாமல் பிரச்சனை செய்தது சர்ச்சை ஆனது.
vijayakumar wife manjula
இந்த நிலையில், ஷகீலா உடனான பேட்டி ஒன்றில் தன் தாயின் கடைசி நிமிடங்கள் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்களை போட்டுடைத்துள்ளார் வனிதா. அதன்படி ஏர்போர்டில் விஜயகுமாருடன் நடந்த சண்டைக்கு பின்னர் ஒருநாள் மஞ்சுளா தன்னை வீட்டு அழைத்ததாகவும், அப்போது வீட்டுக்கு வந்து தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுததாகவும் வனிதா கூறினார்.
இதையும் படியுங்கள்... 11 வயதில் தந்தையை இழந்தேன்.. சிங்கப்பெண்ணாக வளர்த்த தாய் - விஜய் டிவி பிரியங்கா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
vanitha vijayakumar
தனது தாயின் குடிப்பழக்கம் பற்றி பேசிய வனிதா, அவருக்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்தும் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என கூறிய அவர், ஒருமுறை பேட்டி அளிக்கும்போதே செம்ம போதையில் இருந்ததை இந்த ஊர், உலகமே பார்த்தது என தெரிவித்தார். 72 மணிநேரத்தில் இறந்துவிடுவார் என தெரிந்ததும், தனது தாய் மஞ்சுளா தன்னிடம் சில ரகசியங்களை சொன்னதாக கூறிய வனிதா, அவை என்ன என்பதையும் விவரித்தார்.
vanitha
இந்தியாவின் தலைசிறந்த வக்கீலான ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து சொத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என கூறினார். அதோடு தான் பல உண்மைகளை சொல்ல வேண்டும் அதனை வீடியோவாக எடு எனவும் கூறினார். ஆனால் நான் அதை செய்யவில்லை. அதேபோல் என்னுடையை தந்தையிடமும் வனிதாவை விட்றாதீங்க என சொன்னார்.
என் அம்மா மஞ்சுளா இறந்தபோது என்னை இறுதிச்சடங்கை செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் சரத்குமாரும், ராதாரவியும் தான் என்னை அழைத்து இறுதிச்சடங்கை செய்ய வைத்தனர். அன்னைக்கு அவங்க மட்டும் இல்லேனா என் தாய்க்கு என்னால் இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாம போயிருக்கும். எனக்கு சொத்தில் உரிமையில்லைனு சொல்றாங்க, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சொத்து பிரிக்கப்பட்டால் என்னுடைய மகள்களுக்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும் அதுவே எனது விருப்பம் என வனிதா கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... அரவிந்த் சாமி என்னோட புள்ள தான்... பிறந்த உடனே தத்து கொடுத்துட்டேன் - மனம் திறந்த மெட்டி ஒலி சீரியல் நடிகர்