விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி பிரபலம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'சிறகடிக்க ஆசை' சீரியலில் தற்போது சன் டிவி சீரியல் பிரபலம் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்ட சீரியல் 'சிறகடிக்க ஆசை'. இயக்குனர் எஸ்.குமரன் இயக்கி வரும் இந்த சீரியலில், வெற்றி வசந்த் என்பவர் கதாநாயகனாகவும், கோமதி பிரியா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும், இயக்குனருமான சுந்தர் ராஜன், அனிலா ஸ்ரீகுமார், பாக்கிய லட்சுமி, தமிழ் செல்வி, ஸ்ரீ தேவா, சல்மா அருண், ப்ரீத்தா ரெட்டி, யோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், முழுக்க முழுக்க ஏழை மருமகளை கொடுமை படுத்தும், மாமியார் பற்றியும்... ஒரு கணவன் எப்படி மனைவிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் ஒளிபரப்பாகி வருகிறது,
தற்போது இந்த சீரியலில், சன் டிவி சீரியல் நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலை பண்டிகையை முன்னிட்டு, ஸ்ருதி வீட்டில் இருந்து சீர் கொண்டு வரும் நேரத்தில்... மீனாவின் அம்மாவும் சீர் எடுத்து வருவதால், விஜயா மீனாவின் அம்மாவை வசதியை சுட்டிக்காட்டி அசிங்க படுத்துகிறார்.
சினிமா ஹீரோயினை உருகி உருகி காதலிக்கும் விஜய் டிவி சீரியல் ஹீரோ... விரைவில் டும்டும்டும்
விஜயாவுக்கு ஆதரவாக மனோஜ் பேச, முத்து... மீனா வீட்டில் இருந்து ஒரு தட்டாவது வந்தது, மலேசியாவில் இருந்து ஒரு கிண்ணம் கூட வரவில்லை என கூறுகிறார். இதையே சாக்காக வைத்து விஜயா உன்னோடைய அப்பாவை இங்க வர சொல்லுமா என கூற, ரோகிணி அப்பா ஜெர்மனியில் இருப்பதால் அவரால் வர முடியாது என சொல்கிறார். சரி உன்னுடைய மாமாவையாவது வர சொல்லு என கூறுகிறார்.
இதை தொடர்ந்து, ரோகிணி பொங்கல் சீர் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, ஒருவரை மாமாவாக நடிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார். அவர் தான் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான ஜெயமணி.
ராமர் கோயில் பிரதிஷ்டை விழா குறித்து பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!
இவர் திருமதி செல்வம் தொடரில், ஹீரோ செல்வம் (சஞ்சய்) அப்பவாவாக பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது 'புது வசந்தம்' என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். இவரின் என்ட்ரி.. ரோகிணிக்கே ஆப்பாக அமையும் என எதிரிபார்க்கப்படுகிறது.