Vijay: விஜயகாந்த் செஞ்சதெல்லாம் மறந்து போச்சா? சூர்யா செஞ்சதை கூட செய்யாத தளபதி.. புலம்பும் ரசிகர்கள்!
தளபதி விஜய், விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் கூட, அவரை பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல், அவரை மருத்துவமனைக்கு சென்று பார்க்காமல் இருப்பது பற்றி புலம்பி தள்ளி வருகிறார்கள்.
நடிகராக மட்டும் இன்றி அரசியல் வாதியாகவும் வெற்றிநடை போட்டவர் தேமுதிக கட்சி நிறுவனர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த 18-ஆம் தேதி, சளி பிரச்சனை காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் இருமல் மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக உடல்நிலை மோசமாகி ICU வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டர்.
இதை தொடர்ந்து நவம்பர் 24-ஆம் தேதி இவரின் உடல்நிலை தெரிவித்ததாக மருத்துவமனை அறிவித்த ஓரிரு நாட்களில் மீண்டும் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் துடித்து போன நிலையில், தேமுதிக தொண்டர்கள் பலர் மியாட் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் நடிகர் சரத்குமார், ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் அமீர், சூர்யா உட்பட பலர், கேப்டன் உடல்நலத்துடன் மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என தங்களின் பிரார்த்தனைகளை தெரிவித்தனர். அதே போல், நடிகர் நாசர், ஆர்.கே.செல்வமணி, பூச்சு முருகன் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு மனைக்கு சென்று விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர்.
அப்போது விஜயகாந்த் பற்றி வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை நன்கு ஒத்துழைக்கிறது. என நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்தார். இதை தொடர்ந்து விஜயகாந்த் மகன் கேப்டனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு... பல ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்தார். இன்னும் ஒரு வாரத்தில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவை சுட்டி காட்டி விஜய்யை வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நடிகர் விஜய் விஜயகாந்த் செய்த உதவிகளை மறந்து விட்டார் என்பது தான், நெட்டிசன்கள் கோபத்திற்கு காரணம். ஆரம்பகாலத்தில் ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறிய காலத்தில், விஜயகாந்த் பீக்கில் இருந்தார். எனவே அவருடன் விஜய்யை நடிக்க வைத்தால் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என பிளான் போட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், செந்தூரப்பாண்டி படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்காக டேட் கேட்க எஸ்.ஏ.சி ஃபோன் செய்த போது... நானே நேரில் வருகிறேன் என விஜயகாந்த் தானே சென்று கதையை கேட்டார்.
vijayakanth vijay
பின்னர் எத்தனை நாட்கள் டேட் வேண்டும் என்று கேட்டுவிட்டு, தம்பிக்காக இதைக்கூட செய்யமாட்டேன்னா? என சில பட வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு தான் இந்த படத்தில் நடித்தார். இந்த படம் எஸ்.ஏ.சி பிளான் படி செம்ம ஹிட் ஆகி... விஜய்யை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது.
அன்று உங்களுக்காக சில படங்களின் வாய்ப்புகளை உதறிவிட்டு உதவ முன்வந்த விஜயகாந்த் இன்று உடல்நிலை இல்லாமல் இருக்கும் போது... மருத்துவமனைக்கு சென்று பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை... ஒரு பதிவு போட்டாவது தன்னுடைய கரிசனத்தை காட்டி இருக்கலாமே என கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜயகாந்த் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஜய் பேசியதாகவும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.