KRK: நயன்தார, விஜய் சேதுபதி தியேட்டர் விசிட்...ரசிகர்கள் செம்ம ''குஷி.''..கடுப்பில் கிளம்பிய விக்னேஷ் சிவன்.?
Kathuvakula Rendu Kadhal: நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் சென்னை தேவி தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்துள்ளனர்.
kathuvakula rendu kadhal
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைத்திருக்கும் படம் ''காத்துவாக்குல ரெண்டு காதல்''. இந்த படத்தில் கூடுதலாக நடிகை சமந்தாவும் இணைந்துள்ள நிலையில், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
kathuvakula rendu kadhal
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.அனிருத் தனது 25 வது படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
kathuvakula rendu kadhal
முக்கோண காதல் கதை கொண்ட இந்த படத்தில், கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
kathuvakula rendu kadhal
ஒரு ஆண் இரண்டு பெண்களை காதலிப்பதை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் ராம்போ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
kathuvakula rendu kadhal
நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் அப்படியொரு ஜாலியான படத்தை விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். இதனால், மக்கள் மத்தியில் அந்த படத்திற்கு மிக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
kathuvakula rendu kadhal
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த நயன்தாரா, தற்போது படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அதை பார்க்க நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், தேவி தியேட்டருக்கு வந்துள்ளார்.
kathuvakula rendu kadhal
நயன்தாராவை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். பலரும் தலைவி, லேடி சூப்பர் ஸ்டார் என கத்தி கூச்சல் போட்டனர். நயன்தாராவும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
kathuvakula rendu kadhal
இதை பார்த்த விக்னேஷ் சிவன் கோபமடைந்ததால், விரைவில் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் தெரிகிறது. மேலும், விக்னேஷ் சிவன் அடுத்தாக அஜித்தை வைத்து படத்தை நினைத்தால் பதறுகிறது என அஜித் ரசிகர்கள் ஒருபக்கம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.