- Home
- Gallery
- மழை பெய்யும் போது வீட்டில் ஏசி, டிவி, ஃப்ரிட்ஜ் ஸ்விட்ச் ஆஃப் பண்ண சொல்றாங்களே.. அது ஏன் தெரியுமா..?
மழை பெய்யும் போது வீட்டில் ஏசி, டிவி, ஃப்ரிட்ஜ் ஸ்விட்ச் ஆஃப் பண்ண சொல்றாங்களே.. அது ஏன் தெரியுமா..?
இடி மின்னலுடன் மழை பெய்தால் அந்த சமயத்தில், மின்னணு சாதனங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கோடையில் லேசான சாரல் பெய்தாலும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. ஒருபுறம், மேகமூட்டமான வானம் வெப்பத்திலிருந்து நிவாரணம் தந்தாலும், சில அசௌகரியங்களையும் ஏற்படுத்துகிறது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் மழையுடன் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்த இடி மற்றும் மின்னலால் மின்னணு சாதனங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, மழையின் போது இதுகுறித்து கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏசி, டிவி, ஃப்ரிட்ஜ் ஆகியவற்றின் சிகிச்சை அணைத்துவிட்டு அதிலிருந்து பிளாக்கை எடுத்து விடுங்கள். இல்லையெனில், இவை அனைத்தும் சேதமடைய வாய்ப்பு அதிகம் உள்ளன.
இதையும் படிங்க: சிலரை தொடும்போது மட்டும் கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஜிவ்னு இருக்கும்... அதுக்கு என்ன காரணம் தெரியுமா?
அதுமட்டுமின்றி, மின்னல் புயலின் போது வைஃபை ஆன் செய்யப்பட்டிருந்தாலும், அது சேதமடையலாம். மேலும், மொபைல் போன் சார்ஜில் இருந்தால், அதை உடனே ஆப் செய்துவிடுங்கள். இல்லையெனில், மின்னல் தாக்கி போன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: மின் அடுப்பை நேரடியாக ஸ்விட்சு பாக்ஸுடன் இணைக்ககூடாது- ஏன் தெரியுமா?
வெளியில் மின்னலுடன் இடியுடன் மழை பெய்தாலும் வீட்டில் மடிக்கணினியைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கா.? உண்மை என்னவெனில், நீங்கள் அதை தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால், அது சார்ஜரில் இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D