Nayan Vicky Controversy: காலணியுடன் போட்டோஷூட் சர்சை...நயன்தாராவிற்கு நோட்டீஸ் வழங்க தேவஸ்தானம் முடிவு...
Nayanthara and Vignesh shivan Controversy: திருப்பதி கோவில் வளாகத்தில் காலணி அணிந்து போட்டோஷூட் நடத்தியது சர்சையான நிலையில், நயன்தாரா மற்றம் விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டனர்.
Nayanthara-Vignesh Shivan
கடந்த 7 வருடங்களாக காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி 20 புரோகிதர்கள் மந்திரம் ஓத கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது, திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர ஓட்டலில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Nayanthara-Vignesh Shivan
இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி போட்டோசூட் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Nayanthara-Vignesh Shivan
இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து அது எதிர்பாராமல் நடந்த ஒன்று எனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டார்.
Nayanthara-Vignesh Shivan
இந்த நிலையில், தற்போது இது குறித்து பேசிய திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள், ''முக்கிய பிரமுகர்கள் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். தேவஸ்தானம் சார்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் வழங்கப்படும். அவர் அளிக்கும் பதிலை வைத்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.