Keerthy suresh: நான் நடிச்ச படங்களை தானே பார்க்காத கீர்த்தி சுரேஷ்.... பேட்டியில் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்...
Keerthy suresh: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ், தன்னுடைய படங்களை தானே பார்க்க மாட்டேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
Keerthy suresh
தமிழ், தெலுங்கு திரையுலகில் உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.
Keerthy suresh
தமிழில், ஏ.எல்.விஜய் இயக்கிய, நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியை சந்தித்தாலும், தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
Keerthy suresh
விஜய்யுடன் ‘ பைரவா’ சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்’, ரஜினியின் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
Keerthy Suresh
தமிழில் பிசியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இவர் நடித்த சர்காரு வாரி பட்டா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று தந்தது.
Keerthy Suresh
தற்போது தொடர்ச்சியாக தங்கை வேடங்களில் நடித்து வரும், கீரத்தி சுரேஷ் செல்வராகவன் கதாநாயகனாக அறிமுகமாகும் சாணிக்காயிதம் படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தின் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளையும் பெற்றார். இந்தப் படத்தை வளர்ந்து வரும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார்.
Keerthy Suresh
இது போக, கீர்த்தி சுரேஷ் தற்போது, சிரஞ்சீவியுடன் போலா சங்கர், நானி உடன் தசரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்ததால், வருத்தத்தில் இருக்கிறாராம் கீர்த்தி.
Keerthy Suresh
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு முழு திருப்தியை கொடுத்ததில்லை. நடிப்பின் மீது எனக்கு உள்ள காதல், இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அதேபோன்று, தான் நடித்த படங்கள் நஷ்ட்டத்தை சந்திக்க கூடாது என்பதிலும் கவனமாக இருப்பேன்.
மேலும் அவர், பெரும்பாலும் நான் நடித்த படங்களை பார்க்கவே மாட்டேன். ஏனெனில், படத்தில் என்னுடைய தவறுகள் கண் முன்னே வந்து போகும். இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் எண்ணம் தோன்றும்'' இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார் .