கார்த்திக் செயலால்.. சிக்க போகும் தீபா? வேண்டுதல் பலிக்குமா.. பரபரப்பான காட்சிகளுடன் கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் இந்த தொடரின் இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம் வாங்க..
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாட போகும் விஷயத்தை சொல்ல அவள் வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு என சொல்ல தீபா இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடுக்க போவதாக சொல்ல கார்த்திக் அங்கு வந்து விட பேச்சை மாற்றி மழுப்பி விடுகின்றனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hmxfbp67k8yk2kxh90b77hj5/karthigai-deepam---2-_300x168xt.jpg)
இதை தொடர்ந்து இன்னொரு பக்கம் ரூபஸ்ரீ கோகிலா சிக்கி கொண்டதை நினைத்து உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாள். மறுபக்கம் கோகிலா ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க ப்ளான் போட்டு பாத்ரூம் போகணும் கட்டை அவிழ்த்து விடுங்கடா என சொல்ல ரவுடிகள் முடியாது என மறுக்கின்றனர்.
அடுத்ததாக தீபா, சாமி முன்னால் நின்று இந்த ஒருமுறை கார்த்திக்கு தெரியாமல் பாட போறேன், இந்த முறை மட்டும் அவர் கண்ணுல படாமல் காப்பாற்றிடு, பாடி முடிச்சதும் உண்மையை சொல்லிட போறேன் என வேண்டுகிறாள்.
அங்கு வரும் கார்த்திக் முக்கியமான விஷயம் காரணமாக வெளியே செல்வதாக சொல்ல தீபா பூஜை செய்து ஆரத்தி காட்டி அனுப்பி வைக்கிறாள். கார்த்திக் தீபாவிடம் பல்லவியை கண்டுபிடிக்க செல்லும் விஷயத்தை மறைத்து வெளியே கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.