ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு எதிர்நீச்சல் கனிகா கொடுத்த செருப்படி பதில்
எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் நடிகை கனிகா, தன்னை உருவகேலி செய்து ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Kaniha
சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. இதையடுத்து சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துக்கு ஜோடியாக வரலாறு போன்ற படங்களில் நடித்து படிப்படியாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவந்தார். வரலாறு படத்தில் நடித்த பின்னர் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கனிகா.
Ethirneechal Kaniha
இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு நடிகை கனிகாவுக்கு திருமணம் ஆனது. அவர் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவில் செட்டில் ஆனார். பின்னர் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், தமிழில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார்.
Serial Actress Kaniha
இந்த சீரியலில் ஆதிகுணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா. தற்போது சன் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் எதிர்நீச்சலும் ஒன்று. இந்த சீரியலின் மூலம் பிரபலமானதை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கனிகா.
இதையும் படியுங்கள்... அஜித்துக்கு ஜோடியாக நடித்த பின்... ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன 5 ஹீரோயின்ஸ் பற்றி பார்க்கலாம்
Ethirneechal serial Kaniha
நடிகையாக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார் கனிகா. சச்சின் படத்தில் ஜெனிலியா, ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் சதா, சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயா என பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்தது கனிகா தான்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கனிகா. அதில் அவர் கூறியதாவது : “உங்க வீட்டுல இருக்குற பெண்களிடம் இருப்பது தான் என்னிடமும் இருக்கிறது. எதற்காக இப்படி மோசமான கருத்துகளை பதிவிடுகிறார்கள் என தெரியவில்லை. எனது உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் ஹார்மோன் மாற்றம் தான்.
Actress Kaniha
திருமணமாகி கர்ப்பமானவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதைப்பற்றி கொச்சையாக பதிவிடுபவர்களை பார்க்கும் போது அவர்களெல்லாம் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தான் யோசிக்க தோன்றுகிறது. அதேபோல் நான் கவர்ச்சி உடை அணிந்தால் இந்த வயதில் இதெல்லாம் தேவையானு கேட்குறாங்க. எனக்கு பிடிச்ச ஆடையை நான் அணிகிறேன். அந்த சுதந்திரம் எனக்கு இருக்கிறது. அதை எப்படி பார்க்க வேண்டும் என்கிற வரைமுறையும் உள்ளது.” என கூறி உள்ளார் கனிகா.
இதையும் படியுங்கள்... விவாகரத்து கேட்டதே அவள் தான்! கோர்ட்டில் கூட இதான் நடந்துச்சு? 2-வது திருமணத்தின் விஷ்ணு விஷால் போட்ட கண்டீஷன்