ஐந்தே நிமிடம் கதையை கேட்டுட்டு... பர்சில் இருந்த 3500 ரூபாய் பணத்தை இயக்குனரிடம் கொடுத்து ஓகே சொன்ன நயன்தாரா!
நடிகை நயன்தாரா தன்னிடம் 5 நிமிடம் மட்டுமே கதையை கேட்டு விட்டு, படத்தை ஓகே செய்ததாக பிரபல இயக்குனர் கூறியுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே மாதிரியான கதைகளில் நடிப்பதை விட, வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுபவர் நடிகை நயன்தாரா. குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட அழுத்தமான கதை என்றால் அதை மிஸ் பண்ணவே கூடாது என நினைக்கும் நடிகை தான் நயன்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hx194bx77c9xa53jsnjpc0tq/actress-nayanthara_300x533xt.jpg)
actress nayanthara
அப்படி நயன்தாரா நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் குறிப்பிட்ட சில படங்கள் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்த திரைப்படங்களாகும். அந்த வகையில் இயக்குனர் கோபி நயினார் எழுத்து - இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படமும் ஒன்று. 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்களின் அடிப்படை பிரச்சனை மற்றும் அரசியல் பற்றி பேசிய திரைப்படமாகும்.
nayanthara
நயன்தாரா IAS அதிகாரியாக நடித்திருந்த இப்படம், குறிப்பாக ஆழ்துளை கிணறு குறித்தும், அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றியும் பேசிய திரைப்படம். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் சுனு லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்த இந்த படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். அறம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நயன்தாராவுக்கு வெற்றியை பெற்று தந்தது.
இந்த படத்தின் இயக்குனர் கோபி நயினார் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் நயன்தாராவுக்கு கதை சொல்ல சென்றபோது என்ன நடந்தது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.
Tamannaah Bhatia: 'அரண்மனை 4' ஹிந்தி படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க காதலனுடன் வந்த தமன்னா!
நயன்தாராவை சந்திக்க அவரின் வீட்டுக்கு சென்ற கோபி நயினார்... 5 நிமிடம் கூடிய இந்த படத்தின் கதை கருவே நயனுக்கு பிடித்து போன நிலையில், அவர் நடிப்பதாக கூறியது மட்டும் இன்றி, தன்னுடைய பர்சில் இருந்து 3500 ரூபாயை அவர் கையில் கொடுத்து, இவ்வளவு தான் என்னிடம் இருக்கு வைத்து கொள்ளுங்கள் என கூறினாராம். பின்னர் இந்த படத்தை நயன்தாராவும் KJR ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்ததாக கூறப்பட்டது.5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.