தனுஷின் 3 படத்தில் கமிட் செய்த பின்னர்... ஸ்ருதிஹாசனுக்காக ஐஸ்வர்யாவால் வெளியேற்றப்பட்ட நடிகை யார் தெரியுமா?
ஸ்ருதி ஹாசனை நடிக்க வைப்பதற்காக, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா பிரபல நாயகியை கமிட் செய்த பின்னர் வெளியேற்றிய தகவல் தெரியுமா? அவர் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், தன்னுடைய கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படம் 3. தனுஷுக்கு ஜோடியாக உலக நாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க, முக்கிய வேடத்தில், சிவகார்த்திகேயன், ரோகிணி, சுனிதா, பானுபிரியா, பிரபு, கேப்ரியல்லா போன்ற பலர் நடித்திருந்தனர்.
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்திருந்த இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். முதல் படத்திலேயே அனிருத் இசையில்... தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் சர்வதேச அளவில் பிரபலமானது. கோலிவுட் ரசிகர்களை தாண்டி, பல்வேறு நாடுகளிலும் இந்த பாடலை ரசிகர்கள் முணுமுணுக்க துவங்கினர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை, இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத... சைக்கலாஜிக்கல் திரில்லர் பாணியில் இயக்கி இருந்தார். பயோ போலார் டிஸாடர் பிரச்சனையால் பாதிக்கப்படும் தனுஷ், இல்லாத உருவங்களை கற்பனை செய்து கொண்டு, மனைவி ஜனனியை கொலை செய்து விடுவோமோ என்கிற பயத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரை விடுகிறார். இதனை மிகவும் எமோஷ்னலாக கூறி இருந்தார் ஐஸ்வர்யா.
இப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது. அதே போல்... கடந்த ஆண்டு தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இப்படம், அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகும் நிலையில், இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்தது, ஸ்ருதி ஹாசனை தானம். அப்போது தேதி பிரச்சனை காரணமாக, ஸ்ருதி ஹாசனுக்கு பதில் அமலாபாலை கமிட் செய்துள்ளனர்.
அமலாபால் மற்றும் தனுஷ் நடிக்கும் சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட பின்னர், ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் நடிக்க ஓகே சொன்னதால், கமிட் ஆகி நடித்து வந்த அமலா பாலை வெளியேற்றிவிட்டு ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.