தனியார் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள்! சத்யராஜ் மகள் திவ்யா கூறிய ஷாக்கிங் தகவல்!
நடிகர் சத்யராஜின் மகளான, மருத்துவர் திவ்யா நோயாளிகளை பணம் சம்பாதிக்கும் மிஷினாக பார்க்கும் சில தனியார் மருத்துவமனைகள் பற்றியும் அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில், எந்த கேரக்டர் கொடுத்தாலும்... அதை தனக்கே உரியதான பாணியில், கோயம்புத்தூர் குசும்போடு நடித்து மிரள வைப்பவர் சத்யராஜ். 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்த இவர், தற்போது ஹீரோ - ஹீரோயினின் தந்தை, மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவரின் மகன் சிபி ராஜ், தன்னுடைய தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி... முன்னணி இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால் சத்யராஜின் மகளான திவ்யா ஊட்டச்சத்து மருத்துவராக இருந்து வருகிறார். மகிழ்மதி என்கிற அறக்கட்டத்தை ஒன்றையும் துவங்கி அதன் மூலம் ஏராளமான குழந்தைகள், மற்றும் நோயாளிகளுக்கு உதவி வருகிறார்.
விரைவில் அரசியலுக்கு வர உள்ளதையும் உறுதி செய்துள்ள திவ்யா சத்யராஜ், தற்போது... மிகவும் போல்டாக தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மருத்துவ முறைகேடுகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்.
மருத்துவ முறைகேடு குறித்து இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது, "அனைவருக்கும் வணக்கம், நான் திவ்யா சத்யராஜ். தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேசுவதற்கு தான் இந்த வீடியோ. இது என்னுடைய டாக்டர் பிரெண்ட்ஸிடம் இருந்து வந்த தகவல் தான். சில தனியார் மருத்துவமனைகளில், அந்த மருத்துவமனைக்கு லாபம் வர வேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த டெஸ்ட், ஸ்கேன்ஸ், தேவையில்லாத எம்ஆர்ஐ, போன்றவற்றை எடுக்க வைக்கிறார்கள். ஒரு பேஷன்ட் குணமான பிறகும், இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டு, பின்னரே டிஸ்சார்ஜ் செய்ய சொல்கிறார்கள்.
பலரும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விட பணம் காலியாகும் என்கிற பயம் தான் பேஷண்ட்ஸ்க்கு அதிகமாக இருக்கிறது. எங்கள் அமைப்பு மூலமாக, சில நோயாளிகளுக்கு உதவி செய்து வந்தாலும்... அனைவருக்கும் உதவி செய்வது சாத்தியமற்றது. நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் அல்ல. அதனால் பிரைவேட் மருத்துவமனை வைத்திருப்பவர்கள், நோயாளிகளை மனிதாபி மானத்தோடு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
divya sathyaraj
ஏற்கனவே கேப்டன் வியாகாந்தின் 'ரமணா' படத்தில் தனியார் மருத்துவமனையில் நடக்கும் இப்படி பட்ட முறைகேடுகள் பற்றி பேசப்பட்ட நிலையில், ஒரு மருத்துவரே இப்படி கூறி இருப்பது தான் உச்சகட்ட அதிர்ச்சி. மேலும் இவ்வளவு தைரியமாக இதை பேசியுள்ள திவ்யா சத்யராஜை பலர் மனதார பாராட்டி வருகிறார்கள்.