Rashmika : 10 ஆண்டுகளில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்துள்ளது... மோடி அரசை பாராட்டி தள்ளிய நடிகை ராஷ்மிகா மந்தனா
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாக ராஷ்மிகா கூறி உள்ளார்.
பான் இந்தியா அளவில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் புஷ்பா 2, தி கேர்ள் பிரண்ட் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. இதில் புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதேபோல்; கேர்ள் பிரண்ட் திரைப்படத்தை பாடகி சின்மயியின் கணவர் ராகுல் இயக்குகிறார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hxtw6mzky98kaeqvyqnjgh1p/d612b5fd-0149-4163-87e1-59a339f2ed45_300x399xt.jpg)
இதுதவிர இந்தியில் சாவ்வா மற்றும் சிக்கந்தர் ஆகிய இரண்டு படங்கள் உள்ளன. சாவ்வா என்பது வரலாற்று கதையம்சம் கொண்ட படமாகும். அப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கெளஷலுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதேபோல் சிக்கந்தர் திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் ராஷ்மிகா. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். மேலும் தமிழிலும் நடிகை ராஷ்மிகா கைவசம் ரெயின்போ என்கிற திரைப்படம் உள்ளது.
இதையும் படியுங்கள்... GV Prakash : சைந்தவி உடனான விவாகரத்து அறிவிப்பால் மன உளைச்சல்... அறிக்கை மூலம் ஆதங்கத்தை கொட்டிய ஜிவி பிரகாஷ்
Rashmika
இந்நிலையில், மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் பயணித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா, அதுபற்றி அவர் கூறியதாவது : “அடல் சேது பாலத்தில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அந்த பாலத்தால் என்னுடைய 2 மணி நேர பயணத்தை 20 நிமிடங்களில் முடித்தது. இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது சாத்தியமாகும் என யாரும் நினைக்கவில்லை. மும்பையிலிருந்து நவி மும்பைக்கு பயணிக்க எளிதாக பயணிக்க இந்த பாலம் உதவுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாக மோடி அரசையும் பாராட்டி பேசி இருக்கிறார் ராஷ்மிகா.
மும்பை நகரில் கட்டப்பட்டு உள்ள கடல் பாலமான இதை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நாட்டிலேயே மிகவும் நீளமான பாலம் இதுதான். மும்பையில் உள்ள சவேரி பகுதியையும் நவா ஷேவா பகுதியை இணைக்கிறது. இந்த அடல் சேது கடல் பாலம் ரூ.21,200 கோடி செலவில் 6 வழிச்சாலையை கொண்டதாக கட்டப்பட்டது. இதன் மொத்த நீளம் 21.8 கிலோ மீட்டர். இந்த பாலம் 16 கிலோ மீட்டருக்கு மேல் கடலில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Urvashi: ஊர்வசி குடிக்கு அடிமையாக காரணம் இந்த பிரபலம் தான்... மீண்டது எப்படி? செய்யாறு பாலு பகிர்ந்த தகவல்!