குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா எதிர்நீச்சல் மதுமிதா? வழக்குப்பதிவு செய்த போலீசார் சொன்னதென்ன?
எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வரும் மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
Madhumitha
சன் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் மதுமிதா. இவர் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கோயிலில் தன் நண்பரின் புது காருக்கு பூஜை போட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். அப்போது வரும்போது காரை மதுமிதா தான் ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ரவிக்குமார் என்கிற காவலர் மீது மோதியுள்ளார்.
Ethirneechal Madhumitha
இதில் பலத்த காயம் அடைந்த காவலர் ரவிக்குமாரை சிகிச்சைக்காக குளோபல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் மதுமிதா வந்த காரை பறிமுதல் செய்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த விபத்து தொடர்பாக நடிகை மதுமிதாவிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை அடிச்சாரு... வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிய நடிகை பரபரப்பு புகார்
Serial Actress Madhumitha
மேலும் அந்த சமயத்தில் நடிகை மதுமிதா குடிபோதையில் இருந்ததாகவும் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில், விசாரணை அதிகாரி திருமுருகன் என்பவர் அளித்த விளக்கத்தில் நடிகை மதுமிதா குடித்துவிட்டு கார் ஓட்டினார் என்கிற தகவல் உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அவரிடம் ஓட்டுநர் உரிமமும் இருந்ததாக அவர் கூறினார்.
Madhumitha Accident Case
இதன்மூலம் நடிகை மதுமிதா குடிபோதையில் வாகனம் ஓட்டவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவர்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், அவர் கைது செய்யப்படுவாரா அல்லது அபராதம் விதிக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும். இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக முதலில் நடிக்க இருந்தது சன் டிவி சீரியல் ஹீரோயினா? இது தெரியாம போச்சே.!