லேட்டா வந்தாலும்... பிக்பாஸிடம் இருந்து வெயிட்டான தொகையை சம்பளமாக வாங்கிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுள்ள ஐந்து போட்டியாளர்களின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Bigg Boss Tamil season 7
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதில் புதிய டுவிஸ்டாக கடந்த வார இறுதியில் ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பி டுவிஸ்ட் கொடுத்தார் கமல்ஹாசன். அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ மற்றும் அன்ன பாரதி ஆகியோரால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அவர்களின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.
பிராவோ, அர்ச்சனா
பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள பிராவோவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அன்ன பாரதி, தினேஷ்
அதேபோல் பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதியும் பிக்பாஸில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். சீரியல் நடிகர் தினேஷுக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
அர்ச்சனா, கானா பாலா
வந்துள்ள வைல்டு கார்டு போட்டியாளர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்றால் அது கானா பாலா தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசித்ரா
இந்த சீசனிலேயே அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளராக பவா செல்லதுரை இருந்து வந்தார். அவர் வெளியேறிவிட்டதால், தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்றால் அது விசித்ரா தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.28 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... துணிவு முதல் போர் தொழில் வரை... தீபாவளி விருந்தாக டிவியில் போட்டிபோட்டு ஒளிபரப்பாக உள்ள புதுப்படங்களின் லிஸ்ட்