நான் PR மூலமா தான் ஜெயிச்சேன்! இந்த ட்விஸ்டை எதிர்பாக்கல.. மாயா - பூர்ணிமாவுக்கு பளார் பதிலடி கொடுத்த அர்ச்சனா
பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளரான அர்ச்சனா, PR மூலம் வெற்றி பெற்றதாக எழுந்த சர்ச்சைக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
Archana Bigg Boss
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து... டைட்டிலை தட்டி தூக்கி உள்ளார் 'ராஜா ராணி' சீரியல் நடிகையான அர்ச்சனா. இவருடைய வெற்றி மக்களால் ஏற்றுக்கொள்ள பட்டாலும், பிக்பாஸ் A டீமை சேர்ந்த மாயா, பூர்ணிமா, உள்ளிட்ட சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பொறாமையில் பொங்கி வருகிறார்கள்.
VJ Archana
மாயா, அர்ச்சனாவின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாமல் வெளிப்படையாகவே காசு கொடுத்து டைட்டிலை வாங்கியதாக விமர்சித்தார். இந்நிலையில் அர்ச்சனா டைட்டிலை வென்றதற்கு பின், முதல் முறையாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பணம் கொடுத்து டைட்டில் வாங்கியதாக.. அர்ச்சனாவிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, தரமான பதிலடி கொடுத்து அதிரவைத்துள்ளார்.
மீண்டும் இணையும் 'கட்டா குஸ்தி' படத்தின் கூட்டணி! அதிகார பூர்வமாக அறிவித்த விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்!
இது குறித்து அர்ச்சனா கூறியுள்ளதாவது... "நான் ஜெயிச்சதுக்கு 50 லட்ச ரூபாய் கொடுக்குறாங்க. நான் ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் என கொடுத்து ஒட்டு வாங்கி இருந்தாலும் 19 கோடி ரூபாய் செலவு செய்து நான் வெற்றி பெற்றிருக்கிறேனா? என அதிர்ச்சியுடன் தொகுப்பாளரை பார்த்து கேட்டார். சரி 18 கோடி பேர் என்ன புடிச்சு வோட் பண்ணாங்கன்னு வச்சுக்கோங்க, ஒரு கோடி பேர் நான் காசு கொடுத்து ஓட்டு போட்டு இருந்தாலும், ஒரு கோடி ரூபா செலவு பண்ணி நான் ரூ.50 லட்சம் பிரைஸ் மணியை வாங்கிட்டு போகணுமா? என கேட்டார்.
Archana
இதைத்தொடர்ந்து பேசிய தொகுப்பாளர், இதனால் தான் நீங்கள் வாங்கிய காசு பிஆர் டீமுக்கு கொடுப்பதற்கே கரெக்டாக இருக்கும் என சொல்கிறார்கள் என கூறினார்.
Bigg Boss Archana
இதை கேட்டு சிரித்த அர்ச்சனா, "ஒரே ஒரு விஷயம் நான் சொல்றேன்!! என்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தா? சின்ன பட்ஜெட்டில் அழகா ஒரு படத்தை நானே எடுத்து ஹீரோயினா நடிச்சிட்டு போலாம். ஏன்னா நான் வந்தது அதற்காக தான். ஆனால் ஒரு கட்டத்தில், என்னுடைய இமேஜ், என்னுடைய பர்சனல், என்னுடைய இன்செக்யூரிட்டி, போன்ற எல்லாவற்றையும் பேசி நான்... எனக்கு நானே டேஞ்சரை உருவாக்கி இருக்கேன். நாளைக்கு எப்படி வேணாலும் போகலாம் என தெரிவித்தார்.
BB Tamil 7
தொடர்ந்து பேசிய அர்ச்சனா, எதற்கு பி ஆர் ஐ மூலம் ஓட்டுக்களை வாங்க வேண்டும்? அதேபோல் நீங்க சொல்றது 1 லட்சம் 10 லட்சம் என்றால் பரவாயில்லை... 19 கோடி பேர். இது மக்களை சந்தேகப்படுவது போல் இருப்பதாக கூறிய அர்ச்சனா.. அவங்க PR டீம் என்று சொல்வதை நான் இப்படியும் யோசிக்கலாம்.
உண்மையில் நான் பி ஆர் மூலமாக தான் ஜெயிச்சி இருக்கேன் 'Public Response). மக்கள் எனக்கு கொடுத்த ஒத்துழைப்பால் தான் ஜெயித்திருக்கிறேன் என்பதை பெருமிதத்தோடு சொல்வேன் என தெரிவித்துள்ளார். இந்த பேட்டி மூலம் PR டீம் மூலம் தான் ஜெயித்ததாக பேசிய சிலருக்கு அர்ச்சனா பளார் பதிலடி கொடுத்துள்ளதாக பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் அர்ச்சனா ஆர்மியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.