34 வயசாச்சு! காசை தவிர எல்லாத்தையும் சம்பாதிச்சிருக்கேன்.. அரிய புகைப்படங்களும் பிரதீப் ஆன்டனி போட்ட பதிவு!
நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பிரதீப் ஆண்டனி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது போட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீஸாபி 7 நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போட்டியாளர்களின் முக்கியமானவர் பிரதீப் ஆண்டனி. மாயாவை விட செம்ம ஸ்டாட்டர்ஜியுடன் விளையாடிய இவரையே, மாயா கேங் பொய் பழி சுமாற்றி வெளியே அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நடுவராக இருந்து நடுநிலையாக பேச வேண்டிய கமல்ஹாசனும் தீர விசாரிக்காமல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கினார்.
உள்ளே இருந்த போட்டியாளர்கள் ஒருமித்த கருத்துடன், பேசும் போது... பிரதீபுக்கு நியாயம் கேட்டு போராடியதால், அனைவரது ஃபேவரட் போட்டியாளராக மாறினார் அர்ச்சனா. இதுவே இவர் டைட்டிலை தட்டி கைப்பற்ற காரணமாகவும் அமைந்தது.
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரியாக பிரதீப் ஆன்டனி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இந்நிலையில் பிரதீப் ஆண்டனி... தன்னுடைய பழைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மிகவும் உருக்கமான சில பதிவுகளை போட்டுள்ளார்.
அதில் எனக்கு '34 வயது ஆகிடுச்சு.. திரும்பி பார்த்தா காச தவிர எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன். எதுவுமே இல்லடா எனக்கு, இருந்தாலும் எனக்கு நல்ல சாப்பாடு போட்டு, படிக்க வைத்து, இன்னும் என் பேஷனுக்காக சப்போர்ட் பண்ணிட்டு இருக்கும் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது’ என பதிவிட்டுள்ளார்.
Pradeep Antony
மேலும் இந்த பதிவுடன் சேர்த்து... சிறிய வயதில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஒரு புறம் ஆறுதல் கூறி வந்தாலும்... நீங்கள் நினைத்ததை விட அதிக பணம் சம்பாதிப்பீர்கள் நம்பிக்கையோடு இருங்கள் என கூறி வருகின்றனர்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த, பிரதீப் ஆண்டனியை... வளர்த்தது அவருடைய சித்தி தான். அவரை நிம்மதியாக, சந்தோஷமாக பார்த்து கொள்ள வேண்டும் என, பலமுறை பிக்பாஸ் வீட்டில் இவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.