முகம் தங்கம் போல மினுமினுங்க அன்னாசி பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!
அன்னாசிப்பழம் ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கறைகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற பெரிதும் உதவுகிறது. இதனுடன், முகத்திற்கு இயற்கையான பொலிவையும் தருகிறது.
இன்றைய காலகட்டத்தில், நாம் எல்லாரும் பளபளப்பான மற்றும் களங்கமற்ற சருமத்தைப் பெற விரும்புகிறோம். இதனால், பலர் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் எவ்வளவு பணம் செலவழித்தாலும், அவர்களால் விரும்பிய பலனைப் பெற முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இன்று உங்களுக்காக அன்னாசிப்பழ ஃபேஸ் பேக் பற்றி இங்கு கொண்டு வந்துள்ளோம்.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி, சி, தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, அன்னாசிப்பழ ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கறைகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற இவை உதவுகிறது. இதனுடன், முகத்திற்கு இயற்கையான பொலிவையும் தருகிறது. எனவே, அன்னாசி பழத்தைக் கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அன்னாசிப்பழ ஃபேஸ் பேக்:
வயதாவதைத் தடுக்க: நீங்கள் இளமையாக இருக்க விரும்பினால், அன்னாசிபழ பேஸ் பேக் அடிக்கடி பயன்படுத்தலாம். ஏனெனில், இதில் ஆகஸிஜனேற்றிகள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ளதால், இவை சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, உங்கள் சருமத்தையும் ஒளிரச் செய்யும். இதற்கு, அன்னாசிபழம் மற்றும் பால் இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும். பின் உங்கள் சருமத்திற்கு ஏற்ப மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். இப்படி தொடர்ந்து செய்தால் இளமையாக இருப்பீர்கள்.
முகப்பருவை நீக்க: முகப்பரு பிரச்சனைகள் அவதிப்படுபவர்களுக்கு அன்னாசிப்பழ ஃபேஸ் பேக் ரொம்பவே நல்லது. இதற்கு அன்னாசிப்பழம், ரெண்டு ஸ்பூன் தேன், 3 ஸ்பூன் கிரீன் டீ ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, பிறகு முகத்தை கழுவி இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி ஐந்து நிமிடம் கழித்து மசாஜ் செய்யவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பருக்கள், கரும்புள்ளிகள் மறையும்.
இதையும் படிங்க: கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக ஜொலிக்க உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க..!
முகத் தழும்புகளை நீக்க: முகத்தில் இருக்கும் தழும்புகளை போக்க அன்னாசிப்பழம் உதவுகிறது. அன்னாசி பழத்தில் இருக்கும் ஆஸ்கார்பிக் அமிலம் வாடுகளையும் சரும இழந்த நிறத்தை மீட்கிறது. மேலும், கருமை நிறத்தை மறைக்கவும், சருமத்தில் இருந்து செல்களை நீக்கவும் உதவுகிறது. இதற்கு அன்னாசிப் பழத்தின் சாற்றை முகத்தில் தடவவும் நன்கு காய்ந்த பிறகு நீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.
இதையும் படிங்க: Beauty Tips : கோடையில் சருமம் குளு குளுனு இருக்க சூப்பரான ஃபேஸ் பேக்..! இப்பவே செய்ங்க..
பிரகாசமான சருமத்தை பெற: உங்கள் முகம் பிரகாசமாக இருக்க விரும்பினால் அன்னாசி பழம் ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள். இது முகத்தில் இருக்கும் இறந்து செல்களை நீக்கி முகத்தை பளிச்சென்று வைக்க உதவுகிறது. இதற்கு அன்னாசி பழத்துவுடன் பாசிப்பயிறு (அ) கடலை மாவு, பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகம் ஜொலிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D