அடி வாங்கியது மறந்து போச்சா? இதுக்கு பிச்சை எடுக்க சொல்லி இருக்கலாம்.. நயன்தாராவை வெளுத்து வாங்கிய பயில்வான்!
நடிகை நயன்தாரா உதவி செய்வதில் கூட ஆதாயம் தேடுபவர்.. காசு தான் அவருடைய நோக்கம் என பயில்வான் ரங்கநாதன் அவரை வெளுத்து வாங்கி உள்ளார்.
nayanthara
கோலிவுட் திரை உலகில், லேடிஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. மலையாளத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றிய நயன் பின்னர் ஒரு சில படங்களில் நடிக்க துவங்கினார். மலையாள படங்கள் இவருக்கு ஆரம்பத்தில் கை கொடுக்காத நிலையில், இவரின் கவனம் தமிழ் திரை உலகின் மீது பட்டது.
nayanthara
தமிழில் நடிகர் சரத்குமார் நடித்த 'ஐயா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா, அதைத் தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி, படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தன்னுடைய மார்க்கெட்டை விடாமல் இழுத்து பிடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா பற்றி... பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியுள்ளார். தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Nayanthara
இது குறித்து பிரபல youtube சேனலில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், "நயன்தாரா இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் அவரது வளர்ச்சி இமயமலை போல் இருந்தது. திரைப்படங்களின் மூலம் நன்கு காசையும் சம்பாதித்தார். அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் தோல்விகளையும்.. அடுத்தடுத்து சந்தித்தார்.
Nayanthara
வல்லவன் படத்தில் நடிக்கும் போது, சிம்புவை காதலித்தார். இந்த காதல் கல்யாணம் வரை சென்றது. பின்னர் அதில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் பிரபுதேவாவின் காதல் வலையில் விழுந்தார். இந்த உறவும் முடிவுக்கு வந்தது. இந்த மாதிரி காதலில் அடிக்கடி தோல்வி அடையும் நடிகைகளை சினிமா கண்டு கொள்ளாது. ஆனால் நயன்தாரா இது போன்ற சமயங்களில் கூட தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றி கொண்டார். அவருடைய ஒரே குறிக்கோள் எப்போதுமே காசு மட்டும் தான் என பேசி உள்ளார்.
Nayanthara
மேலும் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாரா உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அது நல்ல விஷயம் தான். ஆனால் நயன்தாரா புகைப்படத்தோடு அவை வழங்கப்பட்டது. அது மட்டும் இன்றி, நயன்தாராவின் பிசினஸ் விளம்பரம் படுத்தும் விதமாகவும் இந்த விஷயம் இருந்தது. அதேபோல் உதவி பெற்றவர்களிடம் இந்த மாதிரியான பொருட்களை நாங்கள் வாங்கி இருக்கிறோம் என பேச வைத்தார். அதன் வீடியோக்களையும் வெளியிட்டார்கள்.
இதற்கு நயன்தாரா பிச்சை எடுக்க சொல்லி இருக்கலாம். இப்படி பண்ணுவது சரியா? அதனால்தான் உனக்கு ஆண்டவன் பிள்ளைய கூட கொடுக்கவில்லை என மிகவும் வன்மத்தை கக்கும் விதத்தில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். இப்படி மக்கள் கஷ்டப்படும் நேரத்தில், இப்படியான ஒரு விளம்பரம் தேவையா? அந்த அளவுக்கு நயன்தாராவுக்கு பணவெறி பிடித்தவர் என விமர்சித்துள்ளார்.
சிம்புவை காதலித்து பணத்தை பிடுங்கிக் கொண்டார் என்று நினைக்கிறேன். அதை தொடர்ந்து நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது ஏற்பட்ட பிரச்சனை பற்றி பேசி... பிரபுதேவா மனைவியிடம் அடி வாங்கியதெல்லாம் மறந்து போய்விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விக்னேஷ் சிவன் நயன்தாரா எது சொன்னாலும், தலையை ஆட்டும் நபர். நயன்தாரா வந்த நேரம் தான் அஜித் படம் அவர் கையை விட்டு நழுவியதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பொதுவாகவே அனைவரையும் பற்றியும் பரபரப்பாக பேசும் பயில்வான், இந்த முறை நயன்தாராவை கொஞ்சம் கூடுதலாக விமர்சித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.