என் அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் கழுவ போறது இல்ல! 11 லட்சம் செலவு.. ஷீத்தல் பிரிவு குறித்து பேசிய பப்லூ!
தன்னை விட 30 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் முதல் முறையாக பிரேக் அப் குறித்து பேட்டி ஒன்றியில் கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரங்களிலும், குணசித்ர வேடத்திலும் நடித்து பிரபலமான பப்லூ, பட வாய்ப்புகள் குறைந்த போது அதிரடியாக சீரியலில் கால் பதித்தார். இவர் நடித்த 'கண்ணான கண்ணே' சீரியல், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hgm679szzkymtq5z4h2w7b47/babloo-prithiveeraj_300x171xt.jpg)
Babloo Prithiveeraj
ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்தாலும்... மற்றொருபுறம் பிஸினஸிலும் கலக்கி கொண்டிருக்கும் இவர், சென்னையில் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றை நடத்தி வருவது மட்டும் இன்றி, மலேசியாவிலும் பிஸ்னஸ் செய்து வருகிறார். தொழில் ரீதியாக இவர் அடிக்கடி மலேசியா சென்று வந்த போது... ஷீத்தல் என்கிற பெண்ணுக்கும், இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த தகவல் வெளியானபோது... காதலை ஒப்புக்கொண்ட பப்லு... கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஷீத்தலை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் ஹாட் ஜோடியாக இருந்த இருவரும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விட்டதாக தகவல்கள் வெளியானது . இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்கில் இருந்து தங்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றியுள்ளனர். அது போல ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நெட்டிசன் ஒருவர் நீங்கள் பிரிந்து விட்டீர்களா என்று கமெண்டில் கேட்க, அதற்கு ஷீத்தல் அந்த கம்மெண்ட்டை லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில்... பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பப்லு... தொகுப்பாளினி கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது "நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. எனவே மக்களிடம் நான் பேச எந்த தயக்க மாட்டேன். வாழ்க்கை எப்போதுமே ஏதாவது ஒன்றை கற்று கொடுக்கிறது. எது செய்ய வேண்டும்... எது செய்ய கூடாது என்று. இதற்க்கு அப்பறமும் அதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் ஒரு முட்டாள்.
இனி நான் என்னுடை தொழில், அழகு, ஃபிட்னஸ் போன்றவற்றில் கவனம் செலுத்த உள்ளேன். மக்கள் என்னை ரசிக்கும்படி வாழ உள்ளேன் என தெரிவித்துள்ளார். குறிப்பாக என்னுடைய அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் கழுவ போறது இல்ல... பர்சனல் என்பது தனி, அது யாருக்கும் தேவையே இல்லாத ஒன்று. அதே போல், நான் எது சொன்னாலும் 10 பேர் ஆதரிப்பார்கள். 10 பேர் கழுவி ஊற்றுவார்கள் என்பதும் எனக்கு தெரியும்.
Babloo Prithiveeraj
இனி சிங்கிளாக தான் இருக்க போகிறீர்களா? என கேள்வி எழுப்பிய போது .. நான் எப்போதுமே சிங்கிள் இல்லை. மூன்று அக்கா - தங்கைகளுடன் தான் பிறந்துள்ளேன். பெண்களுடன் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளேன். எனக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளனர் என கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஷீத்தலுடனான ரிலேஷன் ஷிப்பில் பிரச்சனை என வெளியாகும் தகவல் குறித்து எழுப்பிய கேள்விக்கு... இது குறித்து என்னிடம் கேட்டீர்களா..? ஷீதலிடம் கேட்டீங்களா என மழுப்பினார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு உங்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஷீத்தல் இருந்தார். இந்த பிறந்தநாளில் ஷீத்தல் இல்லாதது பற்றி கேட்டதற்கு, போனமுறை என் பிறந்தநாளுக்கு மட்டும் 11 லட்சம் செலவு செய்தேன். இந்த முறை திரைப்படங்களில் பிசியாக இருந்ததால் என்னால் எந்த கொண்டாட்டத்தையும் அனுபவிக்க முடியவில்லை என தெரிவித்தார்.
Babloo
அதே போல் இயக்குனர் மிஷ்கினுடன் பிறந்த நாள் கொண்டாடியதாகவும் தெரிவித்தார். வெளிப்படையாக பர்சனல் வாழ்க்கையை பற்றி சொல்ல விரும்பவில்லை என... இவர் மழுப்பி பேசியதை வைத்தே, இவர்கள் இருவருக்குள் வயதை மீறி பற்றி எரிந்து கொண்டிருந்த காதல் தீ அணைந்துள்ளது தெரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.