Velumani: விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவிய அவதூறு செய்திகள்! மனம் உடைந்து... உயிர்விட்ட திரையுலக பிரபலம்!
விஜயகாந்த் நடித்த பல படங்களின் வசன கர்த்தாவும், விஜயகாந்தின் நண்பருமான வேலுமணி... விஜயகாந்த் உடல்நிலை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வேலுமணி. 55 வயதாகும் இவர், 30 ஆண்டுகளுக்கு முன்பே திரை துறைக்குள் நுழைந்து கவிஞர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றியதோடு அவரின் மூன்றாம் உலகம் புத்தகம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்தார். இயக்குனர் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுபார், ரிதம், உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01h8nrem9gdgb0nv6d0sn63c76/whatsapp-image-2023-08-25-at-12-39-36_300x182xt.jpg)
ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்தின் தீவிர ரசிகரான இவருக்கு, விஜயகாந்த் நடித்த தேவன் படத்தில்,வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இவரின் ஜனராஞ்சகமான வசனங்கள் விஜயகாந்தை கவரவே தொடர்ந்து எங்கள் ஆசான், விருதகிரி போன்ற படங்களுக்கும் வேலு மணியை வசனம் எழுத சொன்னார். இதன் மூலம் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் ஏற்பட்டது.
சினிமா மட்டும் அல்லாமல், விஜயகாந்த் அரசியல் சம்பந்தமாகவும், அரசியல் மேடைகளில் பேசுவது குறித்தும் வேலு மணியிடம் கலந்து ஆலோசிப்பதை
வழக்கமாக வைத்திருந்தார். விஜயகாந்த்தின் அன்பை பெற்ற இவர், அவர் உடல் நலிவடைந்து ஒய்வில் இருந்த போதும் ஒருரி முறை சந்தித்து வந்துள்ளார். இந்த தருணத்தில் விஜயகாந்த் பற்றிய அவதூறு செய்திகள் பரவி வந்த நிலையில் அதை நினைத்து நினைத்து அதிக கவலை பட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சரியாக சாப்பிடாமல், மன குழப்பத்துடன் காண பட்ட வேலுமணி, இன்று காலை திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த வேலுமணி தன்னுடைய சகோதரன் மற்றும் சகோதரியின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கடலூரில் நடைபெறும் என கூறப்படுகிறது.