Ajith Hospitalized: அஜித்துக்கு மூளையில் ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளதா? தீயாய் பரவும் தகவல்..! பதறிய ரசிகர்கள்.!
அஜித் சாதாரண உடல் நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு மூளைப்பகுதியில் 'ஸ்டன்ட்' வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி... தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக உயர்ந்தவர் தல அஜித். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை பெருமையான நடிகர்கள் பெருமையாக நினைக்கும் நிலையில், தன்னுடைய ரசிகர்கள் சங்கத்தை அதிரடியாக கலைத்தார். பேனர் வைத்து நடிகர்கள் படங்களை வரவேற்பதை விட உங்களின் குடும்பத்தை முதலில் பாருங்கள் என ரசிகர்களின் நலனை முதலில் நினைத்து பார்த்தார்.
அஜித் ரசிகர் சங்கத்தை கலைத்தாலும்... பல ரசிகர்கள் தற்போது வரை அவரது பெயரில் நற்பணி மன்றங்கள் துவங்கி அதன் மூலம் ஏராளமான மக்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உதவி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தல அஜித் திடீர் என அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என, கேள்வி எழுப்பி வந்த நிலையில் சாதாரண உடல் பரிசோதனைக்காக தான் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் அறிவிக்கப்பட்டது.
Ajith
ஆனால் தற்போது அஜித் உடல்நிலை குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது அஜித்துக்கு மூளைப்பகுதியில் 'ஸ்டன்ட்' அதாவது 'ஸ்கிரீன்' வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தாராம். இப்படி பரவி வரும் தகவல் குறித்து அஜித் தரப்பில் இருந்து விரைவில் விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.