நிறைய குழந்தை பெத்துக்கணும்! அதனால் தான் இதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. உடைந்து அழுத விஜய் டிவி பிரியங்கா!
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, விவாகரத்துக்கு பின்னர்... தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறி, ரசிகர்கள் மனதையும் கலங்க வைத்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தி கிரிஸ்பி கேர்ள்' என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கியவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இதைத் தொடர்ந்து அழகிய பெண்ணே, இசை அன் பிளக்ட், கிளிம்ப்ஸி, போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அதிரடியாக விஜய் டிவிக்கு தாவிய பிரியங்கா தேஷ்பாண்டே, 'சினிமா காரம் காபி' என்கிற நிகழ்ச்சியை தான் முதல் முதலில் தொகுத்து வழங்க துவங்கினார். இதைத் தொடர்ந்து ஒல்லி பெல்லி, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், கிச்சன் சூப்பர் ஸ்டார், கிங்ஸ் ஆப் டான்ஸ், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர், போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டும் இன்றி, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக உள்ளே நுழைந்த பிரியங்கா, பின்னர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ரன்னரப்பாக வெளியேறினார்.
விஜய் டிவியில் பணிபுரியும் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்காவுக்கு, ஏனோ திருமண வாழ்க்கை இவர் நினைத்தது போல் அமையாமல் போனது. திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விட்டு தனியாக பிரிந்த பிரியங்கா... சமீபத்தில் தான் கணவரை விட்டு பிரிந்த தகவலை உறுதி செய்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா, தன்னுடைய ஏக்கத்தையும், ஆசையையும் கூறி பல ரசிகர்கள் மனதை கலங்க வைத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசிய பிரியங்கா, நான் எடுத்த சில முடிவுகள் தவறாக சென்று, என் அம்மாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது. அதனால் இனிமேல் என் வாழ்க்கையில் நான் எடுக்கப்போகும் முடிவுகள் என் அம்மாவை எந்த விதத்திலும் பாதித்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
என்னுடைய பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும், நான் நிறைவேற்றி வருகிறேன். அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது, கார் வாங்கியது, மாடி வீடு கட்டுவது என ஒவ்வொன்றாக தற்போது நிறைவேறி வருகிறது. அடுத்ததாக என்னுடைய ஹெல்த் மீது கவனம் செலுத்த முயற்சித்து வருகிறேன். உடல்பயிற்சியாளர் ஒருவரின் உதவியோடு ஒர்க்அவுட் செய்ய துவங்கி உள்ளேன். அவரும் கண்டிப்பாக என்னை ஃபிட்டாக மாற்றி விடுவதாக நம்பிக்கை கொடுத்துள்ளார்.
எனக்கு நிறைய குழந்தை பெற்றுக் கொள்ளும், என்னை ஒருத்தர் தாங்கு தாங்குனு தாங்கணும் என்கிற ஆசை உள்ளது. அதுக்காக தான் இப்படி என்னை பிட்னஸ் ஆக வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். இப்போதைக்கு என்னுடைய தம்பி குழந்தை தான் எனக்கு எல்லாமே. அவள் ஒருத்தியால்தான் நான் சர்வே பண்ணிக்கிட்டு இருக்கேன். அவள்தான் எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுத்து வருகிறாள்.
நான் சின்ன வயசுல எப்படி இருந்தனோ அப்படி தான் அவளும் இருக்கா. அவளுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவள்தான் என்னுடைய முதல் குழந்தை. 34 வயதில் இருந்து ஒரு சிங்கிள் மதரா இருந்து எங்கள ரொம்ப சிரமப்பட்டு வளர்த்தவங்க எங்க அம்மா. அவங்களுக்கு நான் இனி எந்த கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது என மனம் உருகி பேசியுள்ளார். இதைத்தொடர் தொகுப்பாளினி அர்ச்சனா நீ நினைத்தபடி உன்னை தாங்க தாங்கன்னு தாங்கும் மனிதர் ஒருவர் நிச்சயம் உன் வாழ்க்கையில் வருவார். நீ நிறைய குழந்தைகளை பெத்துக்குவ, இதற்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என கூறியதும் பிரியங்கா மனம் உடைந்து அழுதார். இதை தொடர்ந்து ரசிகர்களும் பிரியங்காவுக்கு தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.