சென்னையில் மெஹந்தி... தாய்லாந்தில் திருமணம்! வரவேற்பு எங்கே தெரியுமா? வரலட்சுமி திருமணத்திற்கு பக்கவா பிளான்!
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
Varalaxmi
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிய நடிகர்களில் ஒருவர் சரத்குமார். நடிகர் என்பதை தாண்டி, பத்திரிகையாளர், அரசியல்வாதி ஆகிய பரிமாணங்களை கொண்ட சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கும் இவருக்கும் வரலட்சுமி மற்றும் பூஜா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hxpgh6264v9d6twqvvmsd6na/actress-varalaxmi-sarathkumar_300x298xt.jpg)
Actress Varalaxmi sarathkumar
இரண்டாவது மனைவி ராதிகா மூலமாக, ராகுல் என்கிற மகன் சரத்குமாருக்கு உள்ளார். இந்நிலையில் சரத்குமாரின் மூத்த மகளும் நடிகையுமான வரலட்சுமிக்கும், இவருடைய நீண்ட நாள் நண்பரான நிக்கோலா சச்தேவ் என்பவருக்கும் அண்மையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
நிக்கோலா சச்தேவ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி மிகப்பெரிய விவாதத்திற்கு ஆளான நிலையில், இதற்க்கு வரலட்சுமி இதற்க்கு தக்க பதிலடி கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.
நிச்சயதார்த்தத்திற்கு பின், காதலர் நிக்கோலா சச்தேவ்வுடன் டேட்டிங் செய்வதில் படு பிசியாக இருக்கும் வரலட்சுமி, சில வாரங்களுக்கு முன்னர், காதலர் தாங்கள் வாழ்வதற்காக வாங்கி இருக்கும் வீட்டின் வீடியோவையும் பகிர்ந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் காதலர் நிக்கோலா சச்தேவ் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Varalaxmi Sarathkumar engagement
இது ஒருபுறம் இருக்க, மகளின் திருமணத்தை பாலிவுட் ஸ்டைலில் நடத்த சரத்குமார் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை இரண்டு குடும்பமும் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலா சச்தேவ் திருமணத்தை ஜூலை 2-ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ள நிலையில், இவர்களின் மெஹந்தி கொண்டாட்டம் திருமணத்திற்கு முந்தைய நாள் சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெறுகிறதாம். திருமணத்தை, தாய்லாந்தில் நடத்த இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை நிக்கோலா சச்தேவ் குடும்பத்தினர் கவனிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின்னர் சென்னை லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாகவும், இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என கூறப்படுகிறது.