"உடனே ஜட்ஜ் பன்றாங்க".. கவர்ச்சியாக ஏன் நடிப்பதில்லை - ஓப்பனாக பேசிய பிரபல நடிகை பிரியங்கா மோகன்!
Actress Priyanka Mohan : கர்நாடகாவில் பிறந்து, கன்னட படங்களில் நடிக்க துவங்கி, அதன் பிறகு கோலிவுட் உலகில் அறிமுகமான நடிகை தான் பிரியங்கா மோகன்.
Priyanka Mohan
கர்நாடகாவில் பிறந்து தற்பொழுது கோலிவுட் உலகில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று வரும் நடிகை தான் பிரியங்கா அருள் மோகன். இவருடைய தந்தை ஒரு தமிழர் ஆவார். பெங்களூரில் பிறந்திருந்தாலும், தற்பொழுது சென்னையில் வசித்து தான் தனது திரைப்பட பணிகளை அவர் கவனித்து வருகிறார்.
Actress Priyanka
கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட உலகில் வெளியான ஒரு திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "டாக்டர்" திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் நடிக்க தொடங்கினார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான "கேப்டன் மில்லர்" திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Priyanka
இந்நிலையில் தனது திரைப்படங்களில் அவர் கிளாமராக நடிக்காதது ஏன் என்பது குறித்து அவரிடம் கேட்ட பொழுது "வெறும் உடலை காட்டி நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை, "ஸ்கின் ஷோ" எனக்கு எப்பொழுதுமே பிடிக்காது. எனக்கு அது Comfrotableலாகவும் இருக்காது". "இதையெல்லாம் தாண்டி அப்படி நடிக்க எனக்கு தைரியமும் இல்லை".
"அதே சமயம் கொஞ்சம் "ஸ்கின் ஷோ" இருந்தாலும் கூட, உடனே அந்த நடிகையை ஜட்ஜ் செய்து விடுகிறார்கள். இவர் இப்படித்தான் இருப்பார் என்று யுகங்களை கிளப்பிவிடுகிறார்கள். ஆகையால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.