நைட்டு போன் பண்ணி கூப்பிடுவாங்க; அந்த தவறான உறவால்.. அஜித்துடன் நடிக்க மறுத்தேன்- நடிகை கிரண் சொன்ன ஷாக் தகவல்
நடிகை கிரண் தனக்கு சினிமாவில் நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றியும், தவறான உறவால் தான் தவறவிட்ட வாய்ப்புகள் பற்றியும் மனம்விட்டு பேசி இருக்கிறார்.
Kiran
தமிழ் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் கிரண். ஜெமினி படம் மூலம் அறிமுகமான இவர், தன்னுடைய முதல் படத்திலேயே துறு துறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஒரே படத்தில் பேமஸ் ஆன கிரணுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய வின்னர், அன்பே சிவம், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வில்லன் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார் கிரண்.
Kiran rathod
இதுதவிர ஐட்டம் டான்சராகவும் கலக்கி வந்த கிரண், விஜய், விஷால், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி இளசுகளை கவர்ந்தார். இதையடுத்து வயசு ஏற ஏற, உடல் எடையும் அதிகரித்ததால், கிரணுக்கு பட வாய்ப்புகளும் குறையத்தொடங்கின. இதனால் இன்ஸ்டாகிராமில் மட்டும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார் கிரண். இந்த நிலையில், நடிகை ஷகீலா தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்காக நடிகை கிரணை நேர்காணல் செய்துள்ளார்.
Kiran rathore
அதில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார் கிரண். அதன்படி நடிகை கிரண் தன்னைப்பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சோசியல் மீடியாவில் தனக்கு மூன்று முறை திருமணம் ஆனாதாக சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி எனக்கு மூன்று குழந்தை இருப்பதாகவும் எழுதுகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. பாலிவுட் படங்களில் நான் நடித்தபோது என் அருகில் யாரும் நெருங்க முடியாது. ஏனெனில் அங்கு என்னுடைய உறவினர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
இதையும் படியுங்கள்... “நண்பர் என்று கூறியே பலர் என்னை படுக்கைக்கு அழைத்தனர்.. அப்ப தான் புரிஞ்சுது..” நடிகை கிரண் ஓபன் டாக்..
Kiran missed ajith movie
ஆனால் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியதும் நான் ஓவர் நைட்டில் ஸ்டார் ஆகிவிட்டேன். ஜெமினி படம் என்னை பிரபலம் ஆக்கியது. அதன்பின்னர் எனக்கு வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்ததால் நான் சந்தோஷமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் நான் காதலிக்க தொடங்கியதும், திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு விலகும் முடிவுக்கு வந்தேன். அப்போது அஜித் படத்தில் நடிக்க அழைத்தும் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.
Kiran toxic relationship
பின்னர் தான் அந்த உறவு தவறானது என உணர்ந்தேன். அவரை விட்டு பிரிந்த பின்னர், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய போதுதான் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டேன். நண்பர்களாக என்னிடம் பழகியவர்கள் கூட எனக்கு நைட் போன் போட்டு கூப்பிடுவார்கள். சிலர் நான் கவர்ச்சியாக உடை அணிவதால் என்னை பார்ன் ஸ்டார் என்று அழைத்தார்கள். அப்போது தான் சினிமாவில் யாருமே நண்பர்கள் இல்லை என்பதை புரிந்துகொண்டேன்.
kiran about app
அதேபோல் இளமை ஊஞ்சல் என்கிற படத்தில் நடித்தது ஏன் என ஷகீலா கேள்வி எழுப்ப, காசுக்காக தான் நடித்தேன் என ஓப்பனாக பதிலளித்தார் கிரண். அது மோசமான படமாக இருந்தாலும், அதில் நமீதா, சாவ்லா ஆகியோருடன் சேர்ந்து நடித்த அனுபவம் ஜாலியாக இருந்தது. அதேபோல் வாய்ப்பு கிடைக்காததால் தான் செயலி தொடங்கி என்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு சம்பாதித்து வருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என ஒளிவு மறைவின்றி பேசி இருக்கிறார் கிரண்.
இதையும் படியுங்கள்... ஹீரோயினாக அறிமுகமாகும் பேபி சாரா; அதுவும் பொன்னியின் செல்வன் நடிகருக்கு ஜோடியாக..! இயக்கப்போவது யார் தெரியுமா?