Nadhiya: இனி அப்படி கூப்பிட்டா முத்தம் கொடுத்துடுவேன்! நதியாவை உதட்டை மூடிக்கொண்டு ஓடவைத்த நடிகர்!
நடிகை நதியாவுக்கு முத்தம் கொடுத்து விடுவேன் என பிரபல ஹீரோ மிரட்டியது குறித்து அவரே சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த நடிகை நதியா, 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு' என்கிற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய துறுதுறு நடிப்பால் மலையாள ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், இப்படத்தின் ரீமேக்காக தமிழில் இயக்குனர் பாசில் இயக்கிய 'பூவே பூச்சூடவா' படத்தில் நடித்தார்.
இப்படம் தமிழில் சூப் ஹிட் ஆனதோடு, நதியாவுக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. பின்னர் ரஜினி, பிரபு, சத்யராஜ், என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார் நதியா. அதே போல் மாடர்ன் உடை அணிந்தாலும் துளியும் ஆபாசம் இல்லாமல் நடித்தார். மேலும் நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா பொட்டு என இவர் படங்களில் அணிந்து வரும் நகை முதல் ஹேர் ஸ்டைல் வரை பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
Nadiya
தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமெரிக்காவை சேர்ந்த ஷிரிஷ் காட்போல் என்பவரை, 1988-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நதியா, சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின்னர், மீண்டும் தமிழில் எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி என்கிற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
nadhiya
தற்போது மீண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாகியுள்ள நதியா, மலையாள தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தனக்கு முத்தம் கொடுத்து விடுவேன் என நடிகர் முகேஷ் மிரட்டிய சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
nadhiya
நடிகர் முகேஷ் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியில்... பேசிய நதியா, 1986 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'சாமா' என்ற படத்தில் நடிக்கும் போது தான் முகேஷை சந்தித்தேன். முகேஷ் சிரிக்காமல் கூட பல ஜோக் சொல்வர். ஒரு கட்டத்தில் அவர் அடிக்கும் ஜோக்குகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகையாக மாறிவிட்டேன். ஷூட்டிங் வந்தால் முதலில் அவர் எங்கு இருக்கிறார் என்று தான் என் கண்கள் தேடும்.
ஒருமுறை அவர் ஜோக் அடிக்கும் போது நான் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு.. பின் யூ ஆர் குட் ஜோக்கர் என்று நான் சொன்னேன். இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் எல்லோருமே சிரித்தார்கள். ஆனால், முகேஷிற்கு முகம் மாறியது. அதற்க்கு பின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை எங்கு பார்த்தாலும் ஜோக்கர் என்று தான் கூப்பிடுவேன்.
ஒரு நாள் முகேஷ் என்னை கூப்பிட்டு இனிமேல் நீ ஜோக்கர் என்று என்னை கூப்பிட்டால், நான் உனக்கு முத்தம் கொடுத்து விடுவேன் என சொன்னார். அவர் அப்படி கூறியதும் நான் பயந்து விட்டேன். இப்போ ஜோக்கருன்னு சொல்லு... சொல்லு என்று அவர் வம்பு இழுத்தாலும் நான் அந்த இடத்தில் இருந்து உதட்டை மூடிக்கொண்டு ஓடிவிடுவேன்.
ஆனால் கடைசி நாள் படப்பிடிப்பின் போது, நான் காரில் ஏறிய பின்னர் ஹேய் ஜோக்கர் என முகேஷை பார்த்து கத்தி விட்டு தான் சென்றேன் என மறக்க முடியாத பொன்னான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் நதியா.
Breaking: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி..! அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு!