கோலிவுட்டை நம்பி கிளீன் போல்டான 5 கிரிக்கெட் வீரர்கள்! தல தோனிக்கு தான் சேதாரம் ஜாஸ்தி பாஸ்!
தமிழ் சினிமாவில் களமிறங்கி, முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராகலாம் என நினைத்து கிளீன் போல்டு ஆன 5 கிரிக்கெட் வீரர்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
தமிழ் சினிமாவில் சில கிரிக்கெட் பிரபலங்கள் களமிறங்கி, முன்னணி இடத்தை பிடித்து விடலாம் என கனவு கண்ட நிலையில்... முதல் படத்திலேயே கிளீன் போல்ட் ஆகி, வந்த வேகத்திலேயே சொந்த ஊருக்கு மூட்டையை கட்டி விட்டனர். அப்படிப்பட்ட ஐந்து பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அறிந்து சில கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்த நிலையில், வெற்றி வாய்ப்பை கைப்பற்ற முடியாமல் போனது. அப்படி தமிழ் திரையுலகில் களம் கண்ட ஐந்து கிரிக்கெட் பிரபலங்களில் சேதாரம் கொஞ்சம் அதிகம் என்றால் அது தல தோனிக்கு தானாம். அதாவது மற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், திரைப்படங்களில் நடித்து அவர்களால் வெற்றி பெறாமல் போனதால், அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதே நேரம் குறிப்பிட்ட படங்களில் நடித்ததற்கு அவர்கள் சம்பளமாக ஏதேனும் தொகையை பெற்று கொண்டதன் மூலம் அது அவர்களுக்கு லாபமாகவே அமைந்தது.
உதயநிதிக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவித்த மாரி செல்வராஜ் - சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள்!
ஆனால் கிரிக்கெட் வீரர் தோனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான LGM என்கிற படத்தை தயாரித்திருந்தார். எட்டு கோடி செலவில் உருவான இந்த படத்தில், ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும் நடிகை நடிக்க இவானா ஹீரோயினாக நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களோடு தோல்வியை தழுவியது. மேலும் இந்த படத்தை ஓடிடிக்கு விற்க முடியாமல் தற்போது வரை தல தோனி திண்டாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே போல் இந்த படத்தால் நஷ்டத்தையும் தோனி நிறுவனம் சந்தித்துள்ளது. முதல் தயாரிப்பான LGM தோல்வியே தழுவியதால், அடுத்த படம் குறித்து தோனி யோசிப்பாரா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
சரி நடிகர்களானாக களமிறங்கிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் யார் யார் என பார்க்கலாம். இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர், கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் தான். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கிய 'போட்டா போட்டி' என்கிற படத்தில், ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம், காமெடி கதைகளத்தில் அமைந்திருந்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இதைத்தொடர்ந்து ஹீரோவெல்லாம் நமக்கு செட் ஆகாது என குணச்சித்திர வேடத்தில் நடிக்க துவங்கினார். அதன்படி ஜெயம் ரவிக்கு அண்ணனாக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பின்னரும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் திரையுலகில் இருந்தேன் ஒதுங்கி விட்டார்.
இவரை தொடர்ந்த சமீபத்தில் நடிகர் ஹர்பஜன் சிங் 'பிரெண்ட்ஷிப்' என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியான போதிலும், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது.
அதேபோல் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், சியான் விக்ரம் நடித்த 'கோப்ரா' படத்தில் மிரட்டலான அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் அழுத்தமான ஒன்றாக இருந்தாலும் கூட, 'கோப்ரா' படத்தின் மோசமான தோல்வி, இர்பான் பதானையும் காணாமல் போகச் செய்து விட்டது.
இவரை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய, காத்து வாக்கில் இரண்டு காதல் படத்தில் நடிகர் ஸ்ரீசாந்த் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடித்த காட்சிகள் பெரும்பாலும் கட் செய்யப்பட்டு விட்டதால், இவருடைய கதாபாத்திரத்திற்கு ஸ்கோப் இல்லாமல் போனது. காத்து வாக்குல இவரின் கதாபாத்திரமும் கலைந்து போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.