லோஹிப் பேன்ட் அணிந்து வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்
முன்பை விட தற்போது எல்லாம் கவர்ச்சிகளை அதிகப்படுத்தி விட்டார். அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
குறுகிய காலத்திலேயே தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் முன்னணி நாயகியாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு சைமா விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது என பலவற்றையும் தன் சொந்தமாக வைத்துள்ளார்.
நடன கலைஞராக கலைத்துறைக்கு அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முதலில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மாநாடு மயிலாடு சீசன் 3 இல் பங்கேற்று வெற்றியாளர். இதை தொடர்ந்து விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான அசத்தப்போவது யாரில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
மேலும் செய்திகளுக்கு... மகனின் அழகிய புகைப்படத்தோடு ஆறு மாத கால அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்
பின்னர் சன் டிவி போன்ற தொலைக்காட்சிகள் பக்கம் இருந்த இவருக்கு அட்டை கத்தி படம் மூலம் நடிகையாகவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அமுதாவாக நடித்திருந்தார். முன்னதாக தெலுங்கு படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதைத் தொடர்ந்து நீதானா அவன், அவர்களும் இவர்களும்,சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களிலும் காமியோ ரோலில் தோன்றியுள்ளார். அட்டக்கத்தியை தொடர்ந்து ஆச்சரியங்கள், புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என இரண்டு படங்களில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் செய்திகளுக்கு..முத்தம் கேட்கும் வெண்பா... கடுப்பான பாரதி...அதிரடி முடிவெடுக்கும் கண்ணம்மா
வசனம் திரைக்கதை இயக்கம் படத்தில் சிறப்பு ரோலில் தோன்றியிருந்தார். திருடன் போலீஸ் படத்தை தொடர்ந்து காக்கா முட்டை இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இளம் நாயகியாக இருந்த இவர் அந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக குடிசை வாழ் பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.
இந்த படம் பல விருதுகளையும் இவருக்கு பெற்றுக் கொடுத்தது. அறியப்பட்ட நாயகியாக மாறினார் ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் ஆறாவது சினம், ,நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, கடலை, பறந்து செல்லவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் ஒப்பந்தம் ஆகி விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கீழும் இவரது மார்க்கெட் அதிகமானது. தனது தரத்தை உயர்த்திக் கொண்ட இவர் செக்கச்சிவந்த வானம், வடசென்னை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவரது தங்கை துளசியாக நடித்து பாசமலரை கண்முன் நிறுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் பூமிகா மற்றும் தெலுங்கில் இரு படங்கள் வெளியாகியிருந்தது. டாப் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்ட இவரும் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேடி வருகிறார்.
அந்த வகையில் டிரைவர் ஜமுனா படம் உருவாகி வருகிறது. தொடர்ந்து மோகன்தாஸ், தீயவர் குழைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் முன்பை விட தற்போது எல்லாம் கவர்ச்சிகளை அதிகப்படுத்தி விட்டார். அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.