Suchitra: Suchi leaks போட்டோ எல்லாம் திரிஷா கொடுத்தது.. புது குண்டை தூக்கிப்போட்ட சுசித்ரா; பதிலடி தந்த திரிஷா
பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் சுச்சி லீக்ஸில் வெளிவந்த புகைப்படங்களை திரிஷா தான் தன்னிடம் கொடுத்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
Suchitra
பாடகி சுசித்ரா என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சுச்சி லீக்ஸ் விவகாரம் தான். கடந்த 2016-ம் ஆண்டு பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா போன்ற பிரபலங்கள் அந்தரங்க புகைப்படங்கள் சில வெளியாகின. சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியிடப்பட்டன. இதனால் அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01dsqg84y9z05er0mnt0cq4jcw/suchitra-jpg_300x169xt.jpg)
singer suchitra
சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு பின்னர் சுசித்ராவின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. ஒருகட்டத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அவரது கணவர் கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுசித்ரா சில ஆண்டுகள் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டார்.
Suchi leaks
அதன்பின்னர் பிக்பாஸ் குறித்து அவ்வப்போது பேட்டியாளித்து வந்த சுசித்ரா, தற்போது தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். குறிப்பாக தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து, சுச்சி லீக்ஸ் விவகாரம் போன்றவை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் சுசித்ரா. அவரின் அந்த பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... Karthik Kumar : நான் ஓரினசேர்கையாளரா? முன்னாள் மனைவி சுசித்ரா கிளப்பிய புயல் - உண்மையை உடைத்த கார்த்திக்!
Trisha, suchitra
அதிலும் குறிப்பாக சுச்சி லீக்ஸ் போட்டோக்கள் எல்லாம் திரிஷா கொடுத்தது தான் என அவர் பேசி இருப்பது புது புயலை கிளப்பி இருக்கிறது. அதன்படி அவர் கூறியதாவது : “சுச்சி லீக்ஸ் போட்டோ எல்லாம் திரிஷா கொடுத்தது தான். அதுனால தான் I am hurt-னு ஆளாளுக்கு ஒரு ட்வீட் போட்டுட்டு, அவங்க பாதிக்கப்படாம உக்காந்திருக்காங்க. இது ஒரு குரூப்பா ரூம்ல சிரிச்சி சிரிச்சி பண்ண வேலை, அதுல திரிஷாவும் ஒருத்தி.
நீங்களே என்ன அப்படி பண்ணுவீங்க, அப்புறம் நீங்களே ட்வீட் பண்ணி என்னை சபிப்பீர்களா, என்ன நியாயம் இது. அப்புறம் நாங்க சுச்சி மேல கேஸ் போட மாட்டோம் கார்த்திக் குமார் எங்ககிட்ட கெஞ்சி கேட்டாருனு சொல்லி நீங்களே என்னை மன்னிச்சிட்டேன் சொல்றீங்க என்ன இதெல்லாம் என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
Trisha Insta Story
சுசித்ராவின் இந்த பேட்டி வைரல் ஆன நிலையில், நடிகை திரிஷாவும் இதற்கு சூசக பதிலடி கொடுத்திருக்கிறார். அதன்படி மீம் ஒன்றை பகிர்ந்து, நான் சரியாக இருந்தாலும் உலகம் என்னை குறை கூறுகிறது. உண்மைக்கு புரம்பாக பேசுகிறது என பதிவிட்டு அப்செட் ஆக இருக்கும் எமோஜியையும் ஷேர் செய்து இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நாசமா போ.. தற்கொலை பண்ணி செத்து போ! இல்ல அடிச்சே கொன்னுடுவாங்க! பயில்வான் மீது பயங்கர வெறியில் சுசித்ரா!