ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் பூனம் பஜ்வா. முதல் படத்தில் பாவாடை தாவணி அணிந்து பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி இருந்த இவர், அடுத்ததாக ஜீவாவின் கச்சேரி படம் மூலம் தனது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்தார்.
அரண்மனை 2 படத்துக்கு பின்னர் இவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மலையாள திரையுலகம் பக்கம் சென்ற அவர் அங்கு பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் மெய் ஹூன் மூசா ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றன.