சுடரை தேடி வந்து சிக்கிய குழந்தைகள்.. அபி கழுத்தில் கத்தியை வைத்த வேலு - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

First Published Apr 30, 2024, 11:05 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி செல்ல முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது வேலு ரூமுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் சுடரிடம் உனக்கும் எனக்கும் கல்யாணம், ஒழுங்கா ரெடியாகிட்டு வா என்று சொல்ல சுடர் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்கிறாள். மறுபக்கம் அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி அலைகின்றனர். 
 

இன்னொரு பக்கம் எழிலும் சுடரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான், மனோகரி வேலுவுக்கு போன் செய்து அவளை தேடி குழந்தைகள் வந்தாலும் வருவாங்க என்று தகவல் கொடுத்து விடுகிறான். அதே போல் கவினும் அபியும் ஒரு வீட்டின் கதவை தட்ட வேலு வெளியே வருகிறான். 

சுடரின் போட்டோவை காட்டி இவங்களை பார்த்தீங்களா என்று விசாரிக்க வேலு ரவுடிகளை வைத்து குழந்தைகளை கடத்துகிறான், கல்யாணத்துக்கு நோ சொல்லி கொண்டிருக்கும் சுடர் கவினின் குரலை கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அபி அஞ்சலி நீ வந்தா தான் கண் முழிப்பா என்று ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல சுடர் அதிர்ச்சி அடைகிறாள். 

வேலு ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்க என்று மிரட்ட சுடர் முடியாது என்று சொல்ல அபி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட சுடர் வேறு வழியின்று கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறாள். சுடரை தேடி அலையும் எழில் கவின் வரைந்த டிராயிங் பேப்பரை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

click me!