Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!

Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!

Ansgar R |  
Published : May 20, 2024, 11:22 PM IST

Jan Shatabdi Train : கோவை முதல் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை சென்று, மீண்டு அதே வழியில் திரும்பும் சூப்பர் பாஸ்ட் ரயில் தான் ஜன் சதாப்தி. 

தமிழகத்தில் தற்போது கோடை மழை வெளுத்து வாங்கி வருகின்றது, இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை நீர் பெட்டிகளுக்குள் ஒழுகியதால் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் முக்கியமான எக்ஸ்பிரஸ் இரயில் இதுவாகும். செவ்வாய் கிழமைகளை தவிர நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கரூர் - ஈரோடு இடையில் பெய்த கனமழையில் மழை நீர் ரயில் பெட்டிக்குள் (D14) ஒழுகியதால் பயணிகளும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகினர். 

மேலும் மழை நீர் ஒழுகும் இடத்தில் டீ குடிக்கும் பேப்பர் கப்பை வைத்து மழை நீர் விழுகாதவாறு பயணிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை - கோவை ஜனசதாப்தி ரயிலில் இதே போல் மழை நீர் ரயில் பெட்டிகளுக்குள் ஒழுகியது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

03:59பட்ஜெட் குறித்து வழக்கம் போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் - அண்ணாமலை பேட்டி
05:27டாப் Engine நம்ம தான் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக - தவெக தலைவர் விஜய் பேச்சு
03:24வேல்முருகன் பாடலுக்கு நடனமாடிய விஜய் உற்சாகத்தில் ஆரவாரம் செய்த நிர்வாகிகள்.!
03:07கரூரில் செய்தியாளர்களை தாக்கியகுண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேம்நாத் அதிரடி
03:56அமைச்சர் சேகர்பாபு வாய்கிழிய பேசுகிறார். இந்த அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்
05:04உலகின் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.
05:27விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி
02:52கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு
03:49தற்காலிக ஊழியர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர் ! மா.சுப்பிரமணியன் பேட்டி
07:22ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள் ! சபாநாயகர் அப்பாவு பேட்டி