Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!

Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!

Ansgar R |  
Published : May 20, 2024, 11:22 PM IST

Jan Shatabdi Train : கோவை முதல் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை சென்று, மீண்டு அதே வழியில் திரும்பும் சூப்பர் பாஸ்ட் ரயில் தான் ஜன் சதாப்தி. 

தமிழகத்தில் தற்போது கோடை மழை வெளுத்து வாங்கி வருகின்றது, இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை நீர் பெட்டிகளுக்குள் ஒழுகியதால் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் முக்கியமான எக்ஸ்பிரஸ் இரயில் இதுவாகும். செவ்வாய் கிழமைகளை தவிர நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கரூர் - ஈரோடு இடையில் பெய்த கனமழையில் மழை நீர் ரயில் பெட்டிக்குள் (D14) ஒழுகியதால் பயணிகளும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகினர். 

மேலும் மழை நீர் ஒழுகும் இடத்தில் டீ குடிக்கும் பேப்பர் கப்பை வைத்து மழை நீர் விழுகாதவாறு பயணிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை - கோவை ஜனசதாப்தி ரயிலில் இதே போல் மழை நீர் ரயில் பெட்டிகளுக்குள் ஒழுகியது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி