Young Actress Suicide: 27 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! வாட்ஸப்பில் இருந்த அதிர்ச்சி பதிவு!

First Published Apr 30, 2024, 10:57 PM IST

27 வயதே ஆன போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே,  தான் தங்கி இருந்த அப்பார்ட்மெண்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Amrita Pandey

நடிகை அம்ரிதா பாண்டே போஜ்புரி மொழியில் சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இதை தொடர்ந்து, ஹிந்தியில் 2016-ஆம் ஆண்டு வெளியான தங்கல், கடந்த 2013-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற திரைப்படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.
 

amrita pandey bihar actress

இந்நிலையில் அம்ரிதா கடந்த 2022-ஆம் ஆண்டு அனிமேஷன் பொறியாளரான சந்திரமணி ஜங்காட்டை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது.   அம்ரிதா கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி அன்று தனது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள பீகாரில் உள்ள பாகல்பூருக்குச் வந்தார். திருமணம் முடிந்த சில தினங்களிலேயே மும்பை திரும்பிய நிலையில் அம்ரிதா தன்னுடைய பெற்றோருடன் சில தினங்கள் இருந்து விட்டு வருவதாக கூறி உள்ளார்.

இதை தொடன்கிர்த்து ஏப்ரல் 27 அன்று, பீகாரில் உள்ள ஜோக்சார் காவல்துறைக்கு திவ்யதர்மா குடியிருப்பில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அமிர்தா பாண்டே என கண்டுபிடித்தனர்.
 

அம்ரிதாவின் தற்கொலை குறித்து போலீசார் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்த போது... குடும்ப வாழ்க்கையில் எவ்வித பிரச்னையும் இல்லை என தெரியவந்தது. அதே நேரம் அம்ரிதா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறி உள்ளனர். 
 

அம்ரிதாவின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், அவரது  கடைசி வாட்ஸ்அப் பதிவில், ‘இரண்டு படகுகளில் வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஏன் சவாரி செய்ய வேண்டும்?  அதனால் அந்த படகை மூழ்கடித்து என்னுடைய பாதையை எளிதாக்கி கொண்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு பதிவு போட என்ன காரணம் என்பது குறித்தும் போலீசார் ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

click me!