Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்! 4 புரோக்கர் பேர் கைது!

மதுரை தபால் தந்திநகர் திருவள்ளுவர் காலனி, வாசுகி நகர் 3வது தெருவில் hifi Spa மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மதுரை தபால் தந்திநகர் திருவள்ளுவர் காலனி, வாசுகி நகர் 3வது தெருவில் hifi Spa  மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது,


தல்லாகுளம் ச&ஒ காவல் ஆய்வாளர் திரு.பெத்துராஜ்,  தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களையும், புரோக்கராக செயல்பட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,


கைதான புரோக்கர் விபரம்:


 1. அசாருதீன்  திண்டுக்கல் மாவட்டம்,


  2. சகாதீன் மதுரை 


3.முகமது அஸ்லாம்,  ஸ்ரீவில்லிபுத்தூர்,


 4. முதர்சீர், வேலூர் மாவட்டம் 


 ஆகிய நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2.இரு சக்கர வாகனங்கள், ஒரு ஏடிஎம் இயந்திரம் , 5 செல்போன்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்,


மேலும் போலீசார் விசாரணையில்  மசாஜ் சென்டரில், தமிழ்நாடு மற்றும் வெளிமாநில பெண்களிடம் அதிக பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதில் வரும் வருமானத்தை நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து பிரித்துக்கொள்வோம் என்று ஒப்புக்கொண்டனர். 


 மசாஜ் சென்டரில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மானாமதுரை, மதுரை செல்லூர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மூன்று பெண்களையும் மீட்டு மூவரையும் நீதிமன்ற நடுவர் அவர்களின் உத்தரவுப்படி மூன்று பெண்களும் அரசு காப்பகத்தில்  ஒப்படைக்கப்பட்டனர்.

Video Top Stories