ராணுவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த "காஷ்மீர் டூ கன்னியாகுமரிக்கு" பாராசூட்டில் பறந்த ராணுவ வீரர்கள் !
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கம்மாபுரம் பகுதிகளில் என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும், முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.
ராணுவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த "காஷ்மீர் டூ கன்னியாகுமரிக்கு" பாராசூட்டில் பறந்த ராணுவ வீரர்கள் !
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கம்மாபுரம் பகுதிகளில் என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும், முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பகுதி வழியாக பாராசூட் மூலம் ராணுவ வீரர்கள் பறந்து சென்றதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கிராமபுர இளைஞர்களுக்கு, ராணுவத்தில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்த பாராசூட் பயணம் மேற்கொண்டு இருப்பதை அறிந்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த பாராசூட் பயணம் செஞ்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் போது, காற்றின் வாட்டாத்தால், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், மருங்கூர் வழியாக சென்று ராஜேந்திர பட்டினத்தில் தரை இறக்கப்பட்டது. பின்னர் அனைத்து பாகங்களையும் அகற்றி பெரம்பலூர் சென்றனர்.