Pro Kabaddi League: டபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் இடையேயான பரபரப்பான போட்டி டிரா..!
புரோ கபடி லீக்கில் டபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி 46-46 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
புரோ கபடி லீக்கின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ் அணிகள் முதல் 4 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறின.
இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி, அதன்பின்னர் வெகுண்டெழுந்து அபாரமாக விளையாடி தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது. அதேபோலவே இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று, பின்னர் தோல்விகளை தழுவிய டபாங் டெல்லி அணி, கடைசியில் சில வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது.
PAK vs ENG: 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம்
இன்று ஹைதராபாத்தில் டபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் இடையேயான போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளுமே கடுமையாக போட்டியிட்டன. இரு அணிகளும் சிறப்பாக ஆட, கடைசியில் 46-46 என்ற புள்ளி கணக்கில் போட்டி டிரா ஆனது.
BAN vs IND: 3 வீரர்கள் விலகல்.. 3வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி
ஹரியானா ஸ்டீலர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் இடையேயான போட்டியில் தொடக்கம் முதலே தெலுங்கு டைட்டன்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 50-33 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.