“காசு இல்லாத புத்தாண்டு ‘’ மக்களின் கொண்டாட்ட திட்டம் என்ன....?
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, கையில் உள்ள பணத்தை எல்லாம் வங்கியில் டெபாசிட் செய்தாச்சி. இப்ப புது 2,௦௦௦ ரூபாய் நாட்டுக்கு என்ன செய்வது என பலர் திணறுகிறார்கள்.
ஏனென்றால், எந்த ஏடிஎம் வகையிலும் , பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பு ....இது போன்ற பல இடையூருகள் உள்ளன.
இந்நிலையில், கையில் காசு இல்லாத நேரமா பார்த்து புத்தாண்டு வேற நெருங்குதே என , பல யோசனை செய்கிறார்கள். இருந்தாலும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு பிரச்னை இல்லை.
இந்நிலையில்,புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருக்கும் என ஒரு ஆய்வு மேற்கொண்டபோது,
கடந்த ஆண்டை விட , இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கு அதிகமாக செலவிட திட்டம் உள்ளவர்கள் : 52%
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் , அதே பட்ஜெட்டில் கொண்டாட்டம் :31%
சிக்கனமாக கொண்டாட திட்டமிட்டவர்கள் : 17 %
பட்ஜெட் பொருத்துதான் கொண்டாட்டம் : 34 %
புத்தாண்டு பிறப்பதற்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கொண்டாட்டம் குறித்த , மக்களின் மனநிலை , சென்ற ஆண்டு போல இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.