Asianet News TamilAsianet News Tamil

சுட்டெரிக்கும் வெயில்! தண்ணீருக்காக கூட்டமாக படையெடுத்த யானைகள்! மலை கிராம மக்கள் நெகிழ்ச்சி சம்பவம் வைரல்!

கோவை தடாகம் அருகே மூலக்காடு மலைகிராமத்தின் எல்லையில் வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில், நேற்று மாலை குட்டிகளுடன் வந்த யானைகூட்டம் தண்ணீர் தொட்டியில் ஒன்றாக தண்ணீர் அருந்தி சென்றன.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். ஆகையால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடுமையான வெயில் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து இருப்பதால் வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் கோவை தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள்  ஊரின் எல்லையில் வனவிலங்குகள் பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர். 

இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் தொட்டியில் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் அருந்தின. இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Video Top Stories