காமக்கொடூர கணவனை துடிக்க, துடிக்க கொன்ற மனைவி… பிறப்புறுப்பை வெட்டி எறிய நினைத்து தலையை வெட்டிய கொடுமை !!
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை அவரது மனைவியே கூலிப்படையைக் கொண்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜபல்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டாக்டர் ஷஃபதுல்லா கான் என்பவர் தனது மனைவி ஆயிஷா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். பெண் பித்தரான அவர் கடந்த வாரம் வீட்டில் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து வழக்க பதிவு செய்த ஜபல்பூர் காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் சிலர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து டாக்டரை சர்வ சாதாரணமாக கொலை செய்துவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர் ஷஃபதுல்லா கானின் மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதுடன், உளரிக் கொட்டியுருக்கிறார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆயிஷாவிடம் கிடுக்கிப் படி விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த வாக்குமூலம் பகீர் ரகமாக இருந்தது. டாக்டர் ஷஃபதுல்லா கான் பெரும் பித்தராக இருந்துள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி ஏராளமா பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார். மேலும் மகள் என்றும் பாராமல் சொந்த மகளிடமே பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தனது சகோதரியின் மகளை தொடர்ந்து பல நாட்களாக கற்பழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயிஷா, தனது கணவனின் ஆணுறுப்பை அறுத்து எறிய வேண்டும் என நினைத்துள்ளார். இதைத் தொடர்ந்து கூலிப்படையினரை தொடர்பு கொண்ட அவர், அவர்களுக்கு பணம் கொடுத்து டாக்டர் ஷஃபதுல்லா கானின் ஆணுறுப்பை வெட்டி எறியச் சொல்லியுள்ளார்.
ஆனால் டாக்டர் ஷஃபதுல்லா கானை தாக்க வந்த கூலிப்படையினர், அவரின் ஆணுறுப்பை வெட்ட முயன்றுள்ளனர். ஆனால் கத்தி அவரது நெஞ்சில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். ஆயிஷாவின் இந்த வாக்குமூலம் அங்கிருந்த போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்தது. இதையடுத்து ஆயிஷா கைது செய்யப்பட்டுள்ளார்