Asianet News TamilAsianet News Tamil

செல்போனில் மரண வாக்குமூலம்... ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை! 

Confession in cell phone... Youth suicide jumped in front of train
Confession in cell phone...  Youth suicide jumped in front of train
Author
First Published Jul 4, 2018, 1:00 PM IST


குடும்ப தகராறு காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் இளைஞர் ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை
செய்யும் முன் தன் சாவுக்கு யார் யார் காரணம் என்பதை செல்போனில் அவர் பதிவு செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், கிருஷ்ணா லங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் குருவாரெட்டி. இவரது மனைவி காயத்திரி. சில நாட்களாக இவர்கள்
இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக காயத்ரி, குருவாரெட்டி மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசில் புகார் கூறப்பட்ட பின் மனைவி காயத்ரி மீது குருவாரெட்டி கடும்
கோபம் கொண்டுள்ளார். 

இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் சண்டை வலுத்தது. இந்த நிலையில் மனைவியுடனான பிரச்சனையில் மன உளைச்சலுக்கு ஆளான குருவாரெட்டி, ரயில்
முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குருவாரெட்டி, தற்கொலை செய்வதற்கு முன்பாக, செல்போனில் தன் சாவுக்கு காரணம் மனைவி, மாமனார் மற்றும் மைத்துனர்களே என்று வாக்குமூலம்
அளித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios