Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட துணை ராணுவத்தினருக்கு விருந்து வைத்த திருத்தணி போலீசார்.. நெகிழ்ச்சி செயல்!

திருத்தணியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட துணை ராணுவத்தினருக்கு வடை பாயாசம் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கினார்கள் திருத்தணி போலீசார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 330 வாக்கு சாவடி மையங்களில், மக்களவைத் தேர்தல் பணிகளில் பாதுகாப்பு பணிகளில் 29 நாட்களில் காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவத்தினர் பணிகளில் ஈடுபட்டனர். இந்த துணை ராணுவத்தினர் 95 பேருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருத்தணி காவலர்கள் தங்கும் பகுதியில் துணை ராணுவத்தினருக்கு வட பாயசம் வாழை இலை விருந்து மற்றும் சிக்கன் 65 சிக்கன் பிரியாணி வழங்கி திருத்தணி டி.எஸ்.பி மற்றும் காவல்துறையினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

              

Video Top Stories