MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!

Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு ஹிண்ட் கிடைத்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 02 2026, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போனது தொடர்பாக, அவர் படிக்கும் கல்லூரியில் சென்று விசாரித்துள்ளார் சக்தி. அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தர்ஷினிக்கு தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனுடன் பழக்கம் இருந்ததாகவும். அந்த பையன் அனாதை என்பதால் அவன் மீது தர்ஷினி தனி பாசம் வைத்திருந்ததாகவும், தோழி ஒருவர் கூறுகிறார். பின்னர் அந்த மாணவன் பற்றி விசாரிக்கு அவன் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு செல்கிறார் சக்தி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சக்திக்கு காத்திருந்த அதிர்ச்சி
Image Credit : youtube/suntv

சக்திக்கு காத்திருந்த அதிர்ச்சி

சக்தி ஹாஸ்டலில் சென்று அந்த மாணவர் பற்றி விசாரிக்கையில், அவரும் காணாமல் போன விஷயம் சக்திக்கு தெரியவருகிறது. அவர் நேற்றில் இருந்து காணவில்லை என கூறுகிறார்கள். பின்னர் அந்த பையனின் ரூமில் சென்று ஏதேனும் கிடைக்கிறதா என செக் பண்ண செல்கிறார் சக்தி. உள்ளே சென்று அவரின் உடைமைகள் மற்றும் சூட் கேஸ் ஆகியவற்றை எடுத்து சக்தி செக் பண்ணி பார்க்கும் போது, உள்ளே தர்ஷினி உடன் அவர் எடுத்த போட்டோ இருக்கிறது. அதுமட்டுமின்றி நிறைய லவ் கிரீட்டிங் கார்டும் அந்த பெட்டிக்குள் இருக்கிறது. அதன்பின் அந்த பையனின் மாமா நம்பர் வாங்கிவிட்டு அங்கிருந்து செல்கிறார் சக்தி.

Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்

Related Articles

Related image1
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Related image2
Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
35
ஜனனியை வெளுத்துவாங்கிய ஈஸ்வரியின் அப்பா
Image Credit : youtube/suntv

ஜனனியை வெளுத்துவாங்கிய ஈஸ்வரியின் அப்பா

தர்ஷினி காணாமல் போன விஷயம் அறிந்து ஈஸ்வரியின் தந்தை வீட்டிற்கு வருகிறார். வந்ததும் அவர் ஜனனியை அழைத்து அவரை சரமாரியாக சாடுகிறார். நீ இந்த குடும்பத்தை அழிக்க வந்த சதிகாரி, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட, என் பேத்தியை மட்டும் நீ கொடுக்கலேனா, நான் லெட்டர் எழுதி வச்சிட்டு செத்திருவேன் என மிரட்டுகிறார். இதைக்கேட்டு கடுப்பான சக்தி, யோவ் நீ முதல்ல வீட்டை விட்டு வெளியபோயா என விரட்டுகிறார். அவரை தடுக்கும் ஈஸ்வரி, அவர் சொல்றதுல பாதி உண்மை தான சக்தி, என தன் பங்கிற்கு கொளுத்திப்போடுகிறார்.

Ilaiyaraaja : ஒரே பாட்டில் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய இளையராஜா... தேசிய விருது வென்ற அந்த பாடல் பற்றி தெரியுமா?

45
ஜனனி மீது வன்மத்தை கொட்டிய ஈஸ்வரி
Image Credit : youtube/suntv

ஜனனி மீது வன்மத்தை கொட்டிய ஈஸ்வரி

அதுமட்டுமின்றி இங்க இருக்குற எல்லாரோட வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி விடுவதில் உன் பொண்டாட்டி தான் காரணமா இருக்கா என ஈஸ்வரி சொல்ல, ஜனனி மனமுடைந்து போகிறார். அந்த நேரம் பார்த்து தர்ஷினியோடு, அவளுடன் படிக்கும் மாணவன் ஒருவனும் காணாமல் போன விஷயத்தை ஒருவர் ஈஸ்வரியிடம் வந்து கூறுகிறார். அப்போது அதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி, ஏன் எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லாம நீயே எல்லாத்தையும் சுயமா செஞ்சிட்டு இருக்க என கேட்கிறார்.

Ilaiyaraaja : மேஸ்ட்ரோ மேஜிக்... சவாலான ராகங்களிலும் புகுந்து விளையாடி இளையராஜா கொடுத்த அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?

55
ஜனனி எடுத்த முடிவு
Image Credit : youtube/suntv

ஜனனி எடுத்த முடிவு

அப்போது குறுக்கிட்டு பேசும் ஜனனி, அது எந்த அளவுக்கு சரினு தெரியாம நாங்க எப்படி சொல்லுறது என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, நீங்க யாரு என் பொண்ணு விஷயத்துல விசாரணை பண்ணுவதற்கு, உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என கேட்கிறார். வீட்டில் குழப்பமும், ஈஸ்வரிக்கு ஜனனி மீதான வெறுப்பும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அப்போது கதிர், போலீஸ் வந்து கேட்கும்போது நீங்க மட்டும் உண்மையை சொல்லவில்லை என்றால், நீங்க ரெண்டுபேரும் ஜெயிலுக்கு தான் போவீங்க என கூறுகிறார். இந்த நிலையில், ஜனனி, போலீஸ் கண்டுபிடிக்கும் முன் நானே தர்ஷினியை கண்டுபிடிக்கிறேன் என களத்தில் இறங்குகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்
Recommended image2
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image3
Pandian Stores 2 : போலீசுக்கு பயந்து குமார் எடுக்கும் விபரீத முடிவு... முத்துவேல் உயிருக்கு ஆபத்து
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved