MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • ஒரு டீ விலை 20 ரூபாயா.!!! பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்து தேநீர் கடைகள்

ஒரு டீ விலை 20 ரூபாயா.!!! பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்து தேநீர் கடைகள்

சென்னையில் டீ, காபி விலை உயர்ந்த நிலையில், கோவையில் டீ விலை 20 ரூபாயாகவும், காபி விலை 26 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 

2 Min read
Ajmal Khan
Published : Sep 04 2025, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியாவில் டீ பிரியர்கள்
Image Credit : Asianet News

இந்தியாவில் டீ பிரியர்கள்

இந்தியாவில் டீ, காபியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் டீ, காபிக்கு அடிமையாக உள்ளனர். குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு காலையில் ஒரு கிளாஸ் டீ தான் காலை உணவாகவே உள்ளது. 

இப்படியாக‌ டீ மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் டீ, காபி விலையானது கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிளாஸ் டீ 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், ஒரு காபி 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது

24
டீ விலை அதிகரிப்பு
Image Credit : our own

டீ விலை அதிகரிப்பு

விலை உயர்வு அறிவிப்பால் டீ பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பள உயர்வு மட்டும் கிடைக்கவில்லையே ஆனால் டீ விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறதே என புலம்பி வருகிறார்கள். குறிப்பாக ஒரு நாளைக்கு காலை மதியம் இரவு என குறைந்தது ஒருவர் 3 முதல் 4 டீ குடித்து வருகிறார்கள். 

எனவே ஒரு நாளைக்கே டீக்கு மட்டும் 60 ரூபாய் செலவாகி வருவதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு டீயின் விலை 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
டீ, காபி விலை அதிரடி உயர்வு..! எவ்வளவு தெரியுமா? Tea, coffee பிரியர்கள் ஷாக்..!
Related image2
ஆசிரியர்கள் ஷாக்... பணியில் தொடர சிக்கல்.? பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்
34
டீ பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த கோவை
Image Credit : Getty

டீ பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த கோவை

கோவையை பொறுத்தவரையில் சென்னையில் விலை ஏற்றம் செய்த பிறகு என்ன விலை இருக்குமோ அதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கோவையில் ஒரு டீயின் விலையானது 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும், காபியின் விலை 20 ரூபாயிலிருந்து 26 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டீ ப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் இஞ்சி டீயின் விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

44
Black tea 17 ரூபாய்
Image Credit : AI Generated

Black tea 17 ரூபாய்

ஆச்சரியம் அளிக்கும் விதமாக பால் பயன்படுத்தப்படாத Black tea 17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விலை ஏற்றம் கோவையில் பிரபலமான பல பேக்கரிகளில் கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பெரும்பாலான பேக்கரிகளில் இந்த விலை உயர்வுடன் GST யும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. மக்களின் அன்றாட அத்தியாவசிய பானங்களில் ஒன்றான டீ மற்றும் காபியின் இந்த விலை ஏற்றம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கோடையில் தேநீர்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved