MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆசிரியர்கள் ஷாக்... பணியில் தொடர சிக்கல்.? பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

ஆசிரியர்கள் ஷாக்... பணியில் தொடர சிக்கல்.? பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 04 2025, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : GOOGLE

தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க, பணி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்றதாக கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.50 லட்சம் பேருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : our own

இந்த தீர்ப்பு காரணமாக, 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது, குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிக்காலம் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், வேலையில் தொடரவே அவர்கள் கண்டிப்பாக தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Related image1
செப்டம்பர் 15-ம் தேதி வரை தான் டைம்! ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை போட்ட அதிரடி உத்தரவு!
Related image2
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! வங்கி கணக்கில் உடனே வரும் 50% மானியம்
34
Image Credit : our own

இந்த விவகாரம் தொடர்பாக அவரச அவசரமாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், சட்ட நிபுணர்களோடு விரிவாக ஆலோசனை மேற்கொண்டார், இதனையடுத்து இன்று மாலை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளோடு இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், மாவட்ட வாரியாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய நிலையில் உள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

44
Image Credit : our own

அதேபோன்று ஆசிரியர் தகுதி தேர்வை முடித்து பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன . சரியான புள்ளி விவரங்கள் பெற்ற பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரோடு ஆலோசனை நடத்தி உரிய முடிவை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
வேலைவாய்ப்பு
கல்வி
பள்ளிக் கல்வித் துறை
ஆசிரியர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Land Registration: நிலம் வாங்க போறீங்களா? விஜய் அரசு கொடுத்த பம்பர் ஆஃபர்! முழு விவரம் உள்ளே!
Recommended image2
Now Playing
அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
Recommended image3
TN Politics: முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்; ஜோதிடர் ராதன் பண்டிட்டை சுற்றி வெடித்த சர்ச்சை! உண்மை என்ன?
Related Stories
Recommended image1
செப்டம்பர் 15-ம் தேதி வரை தான் டைம்! ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை போட்ட அதிரடி உத்தரவு!
Recommended image2
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! வங்கி கணக்கில் உடனே வரும் 50% மானியம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved